ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் 1930 – 2015
சுவாமிகள் 23.09.2015 அன்று இரவு 10.17  மணிக்கு ரிஷிகேஷில் ஜீவ முக்திடடைந்தார்.
பாரத புண்ணிய பூமியை, நமது இந்து தர்மத்தை உய்விக்க வந்த மகான்.ஆனால் பிற்பாடு மதங்களைக்கடந்த மகானானார்.   
சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆத்ம நண்பரும் பிரபல ஆடிட்டருமான திரு.ரமணி அவர்களை சந்திக்க கோவை சென்றிருந்தபோது இந்த மகானை தரிசிக்க ஆனைகட்டி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். சுவாமிகள் அப்போது அமெரிக்காவில் தனது ஆசிரமத்தில்  இருந்ததால் தரிசிக்க இயலவில்லை. ஜோதிடனான நான் புதனின் அம்சம். மகான்கள் குருவின் அம்சம். புதனுக்கும் குருவிற்கும் ஜோதிட விதிகளின்படி கடும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் ஒன்றையொன்று மிகவும் வசீகரிப்பவை என ஜோதிடத்தில் பல்வேறு ஆய்வுகள் செய்த காலஞ்சென்ற ஜோதிட அறிஞர் நம்புங்கள் நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  காலச் சூழலில் பிறகு பல முறை முயன்றாலும் எனது கர்மா இவரைப்போன்ற மகான்களை தரிசிக்க எனக்கு பாக்கியமில்லை என்பது போன்று உணர்த்தியது. இவர்போன்ற ஞானிகளை உயிரோடிரிந்தபோது தரிசிக்கும் யோக்கியதையை எனக்கு அருளும் இறைவா என என்னைப்படைத்தவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.

 மிக எளிய கிராமமான மஞ்சுக்குடியில் பிறந்த மகான்.. ஆளால் மகத்தான ஆன்மீகவாதி. இந்த உலகை உய்விக்க வந்த ராகவேந்திரரின் மறு உருவமாகவே அவரை நான் கண்டேன். இவர் போன்ற பரிசுத்த ஞானிகளை இனி வரும் காலத்தில் தரிசிக்க இயலாது. காரணம் காலகட்ட தோஷம். ஜோதிட வரலாற்றை நான் எனது வலைப்பூ துவங்கிய போது இவரை எனது மானசீக வழிகாட்டியாக எண்ணியே எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.இனியும் நமக்கு வழிகாட்டியாய் நம் மனதில் நிறைந்து நமது வாழ்வை செம்மைப்படுத்துவார். இதற்கு மேலும் இவரைப்பற்றி எழுத எனக்குத் தகுதியில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.


கனத்த இதயத்துடன்,

அன்பன்,
பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English