போரில் வெற்றி யாருக்கு?

கிரக யுத்தம்


சிலவகை வாழ்வியல் நிகழ்வுகளை குறிப்பிட்ட காலத்தில்தான் அனுபவித்திட வேண்டும் என இறைவன் வகுத்திருப்பான். அதற்கான காரணங்கள் சூட்சுமமானவை. ஒருவரது கர்ம வினைகளோடு தொடர்புடையவை. அது மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வினை துவங்கும்போதுதான் அது தொடர்புடைய இதர வினை ஒருங்கே வந்து இணையும்.
எங்கே நமக்கான செயல்களை எவ்வளவு முயன்றும் நாம் செய்துகொள்ள இயலவில்லையோ அங்கேதான் படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என உணர வேண்டும். 
படைத்தவனின் கருணையாலேயே அந்த செயல் நடந்திட வேண்டும் என வேண்டிக்கொண்டு செயல் நோக்கிய திசையில் தனது பயணத்தை தொடர வேண்டும். உரிய நேரம் வந்ததும் அச்செயல் நிகழும். வெகு சிலருக்கு அவர்களது கடுமையான கர்மவினையின் காரணமாக அச்செயல் மிகுந்த தாமதத்தில் நிகழும் அல்லது மறுக்கப்பட்டிருக்கும் அவர்களது நிலை பரிதாபத்திற்குரியது.
இதை அறியாமல் புலம்புவோர் பலர். ஜோதிடத்தின் மூலம் அத்தகைய சிலவற்றை அறிந்துகொண்டு இறையோடு போட்டிபோட்டு தோல்வியுறுபவர் பலர்.       
பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.

06.07.1991  மாலை  5.49 மணி. கரூர்.
மிதுன லக்ன ஜாதகிக்கு  22.06.2017 வரை சுக்கிர திசை நடக்கிறது. 25 வயதை கடந்துவிட்ட ஜாதகிக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. ஜாதகி மெத்தப்படித்தவர்.
ஜாதகத்தில் மகம் – 2 ல் சுக்கிரன். மகம் – 1 ல் செவ்வாய். இருவருக்கும் இரண்டு பாகைகள் மட்டுமே இடைவெளி.
இங்கு செவ்வாய் சுக்கிரனுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ராசி மண்டலத்தில் குறைவான பாகை இடைவெளியில் பின்னால் நிற்கும் கிரகம் முன்னாள் இருக்கும் கிரகத்தின் கதிர்வீச்சையும் அபகரித்துவிடும் என்பதே கிரக யுத்தத்தின் அடிப்படை.  யுத்தத்தில் வென்ற செவ்வாய் திசா நாதன் சுக்கிரனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.. திருமணத்தை நடத்திட சுக்கிடனுக்கு களத்திர காரகன் என்ற வகையிலும் 12 ஆம் அதிபதி எனும் வகையிலும் முழு உரிமை உள்ளது என்றாலும் செவ்வாயுடன் கிரக யுத்தத்தில் தோல்வியடைந்ததால் செவ்வாயை சார்ந்தே சுக்கிரன் செயல்படும்.  
ராசிநாதன் செவ்வாயே ஜாதகிக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறார் என்பதே உண்மை.
காரணம் காம – களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு பாக்ய ஸ்தானமாகவும் (9 ஆமிடமாக) குடும்ப பாவமான 2 ஆமிடத்திற்கு 2 ஆமிடமாக பாவத் பாவம் எனும் அடிப்படையை கொண்டிருக்கும் 3 ஆம் பாவத்தில் இருக்கும் செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் துணிச்சலான மனோநிலையை ஜாதகருக்கு வழங்கினாலும் குடும்ப வாழ்வை வழங்கிடும் மனோ நிலையில் இருக்காது.
எனவே லக்னத்தில் உச்ச குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்த சூரியனின் திசையில்தான் ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும். குரு செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் துலாத்தில் மேச ராசிக்கு 7 ஆமிடத்தில் 2017 பிற்பகுதியில் வரும்போது ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும்.
ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம் என்பதோடு எட்டாமிடம் உடல் ரீதியான உறவை குறிப்பிடும் இடம் என்பதாலும் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாமிடங்களில் சஞ்சரிக்கும் சனி திருமணத்தை தடுத்திட உரிமையுண்டு. மேலும் ஜனன காலத்தில் எட்டில் குடும்ப பாவாதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் அமைந்ததால் முன்னமே திருமணம் நடைபெறாமல் தடுப்பது சனியின் வேலை.
நவாம்ச அடிப்படையிலும் பாவ அடிப்படையிலும் ஜாதகத்தை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் புரியவரும்.மேலும் ஒரு செயலை தீர்மானிப்பதில் பல காரணிகளும் ஜாதக அமைப்புக்கு தக்கபடி துணை நிற்கும். கர்ம வினைகளை அனுபவிக்க அனைத்து கிரகங்களும் துணை நிற்கும் என்றே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கிரக யுத்தம் எனும் ஒரு குறிப்பிட்ட வகையில் ஜாதகத்தை ஆராய்ந்ததால் ஜாதகத்தில் இதர வகை காரணிகளை நீண்டு விளக்க விரும்பவில்லை. அப்படி ஆராய விரும்புவோர்களுக்காக நவாம்சமும் பாவமும் இங்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
மற்றுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,அன்பன்,பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English