செல்வம்!

இன்றைய காலத்தில் பணி அழுத்தம் காரணமாக குழந்தைப் பிறப்பை தள்ளிபோடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். தாங்கள் விரும்பியபோது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம் அதை போக்கிக்கொண்டுவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இத்தகையவர்கள் ஒரு அரை நாள் செயற்கை கருவூட்டல் மையங்களில் இருந்து, அங்கு வருவோரின் கதைகளை கேட்டால் தாங்கள் எதை ஒத்திவைக்கிறோம் என்பது புரியும். பொருளாதாரத்தில் தன்னிறைவை  எட்டிய பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை இத்தகையவர்கள் நாடிச் செல்லும்போது அவர்களது உடலில் இளம் வயதிற்கேற்ற துடிப்புகள் அடங்கிவிடும். அது புத்திரப் பேறுக்கான வாய்ப்புகளைக் குறைத்துவிடும். இதை மருத்துவர்கள் மூலம் அறியும் வினாடியிலிருந்து இவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறத்துவங்குகிறது. இதன்பிறகு செயற்கை குழந்தையோ, அல்லது தத்துக் குழந்தையோ எனும் நிலைக்கு தள்ளப்படுவதை எண்ணிப் பார்க்க பலருக்கு மனம் வலிக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை. சமீபத்தில் என்னிடம் 32 வயதுப் பெண் ஒருவர் பணிச்சூழல் பற்றி ஜோதிட ஆலோசனை கேட்க வந்தார். பணி நிமித்தம் கணவரை பிரிந்துள்ளார். இன்னும் குழந்தையில்லை. இந்த வயதில்கூட வேலை பற்றித்தான் கேட்டாரே தவிர குழந்தை பற்றி கேட்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குழந்தை இன்மைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பணிச் சூழலே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பணிச்சூழல் பாதிப்பில் இருந்து மீண்டு வர இயலாதவர்கள் குறிப்பாகப் பெண்கள் திருமணம் செய்துகொள்வதையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தவிர்க்கிறார்கள். இன்றைய வாழ்க்கையே போராட்டமான இருக்கும்போது, இதைவிடக் கடினமாக இருக்கும் நாளைய உலகில் நமது குழந்தைகள் போராடுவதை பார்க்க வேண்டாம் என எண்ணுபவர்கள் இவர்கள். காலம் எப்போதும் ஒன்று போல இருக்காது. பருவ காலங்களைப் போலவே வாழ்க்கையும் மாற்றத்திற்குட்பட்டதே. இன்று பெரும்பாலோனோர் தங்கள் அடிப்படை தேவைக்காக தங்கள் வாழ்வை இழந்து சம்பாதிப்பதைவிட சமூக அங்கீகாரத்திற்காகவே தங்களை வருத்திக்கொண்டு சம்பாதிக்கிறார்கள் என்பதே உண்மை. இதே சமூகம்தான் குழந்தையின்மையால் பிற்காலத்தில் தனிமரங்களாகும் போது  தங்கள் வீட்டு விஷேசங்களுக்குக் கூட குழந்தைகளற்ற இவர்களை அழைக்கத் தயங்குகிறார்கள் என்பதையும் இவர்கள் அறிவது அவசியம். இது புரிந்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று இவர்கள் அறிந்துகொள்வார்கள். உண்மையான செல்வம் எது என்பதை இவர்களுக்கு காலம்தான் உணர்த்த வேண்டும்.

கீழே திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகி குழந்தை இல்லாமல் என்னை அனுகிய தம்பதிக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம்.

கடக உதயத்தில் 5 ஆமதிபதி செவ்வாய் நீசம் பெற்று கவிப்புடன் அமைந்துள்ளது புத்திர வகை பிரசன்னம் என்பதை உறுதி செய்கிறது. ஜாமச் செவ்வாய் (வெளிவட்ட செவ்வாய்)  12 ஆமிடமான மிதுனத்தில் மறைந்தது கூடுதல் பாதிப்பு. ஜாமச் சூரியன் உதயத்தில் நிற்க அவரே 1௦ ல் திக்பலம் பெற்று குருவுடன் அமைந்தது புத்திர வகை பிரசன்னம் என்பதை தெளிவாக்குகிறது. உதயாதிபதி சந்திரன் உள்வட்டத்தில் 9 ல் அமைய, வெளிவட்டத்தில் 4 ஆமிடமான துலாத்தில்  திக்பலம் பெற்றுள்ளார். இது ஒரு நல்ல அமைப்பு. இதனால் பிரசன்னத்தில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

ஆரூடம் 11 ஆமிடத்தில் குருவுடன் அமையப்பெற்றது நன்மையே. புத்திர வகையில் இந்த தம்பதிக்கு நிச்சயம் ஒரு நன்மை கிடைக்கும். எனினும் ரிஷப குரு, மீனச் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். ஆரூடம் உதயத்திற்கு பாதக ஸ்தானத்தில் அமைந்துள்ளது என்பதை நினைவு கொள்க. இதனால் இந்தத் தம்பதிக்கு கிடைக்கும் புத்திர பாக்கியத்திலும் ஒரு பாதகம் இருக்கும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. உள்வட்ட உதயாதிபதி சந்திரன் மீனத்தில் அலி கிரகமான புதனுடன் இணைந்து, புதன் சாரம் ரேவதியில் அமைந்துள்ளதும், ஜாமச் சந்திரன் 8 ஆமதிபதி சனியின் அனுசத்தில் துலாத்தில் நிற்பதும் முறையான வழியில் அன்றி இயல்புக்கு மாறான முறையில் இந்தத் தம்பதிக்கு புத்திரம் கிடக்கும் என்பதை குறிப்பிடுகிறது. ஏனெனில் பிரசன்னத்தில் வீரிய காரகன் செவ்வாய் உதயத்தில் 8 ஆமதிபதி சனியில் சாரத்தில் நீசம் பெற, வீரிய ஸ்தானாதிபதி புதன் உள்வட்டத்திலும், வெளிவட்டத்திலும் மீனத்திலேயே அமைந்தது இத்தம்பதிக்கு 3 ஆமிடம் குறிப்பிடும் விஷயங்களில் குறைபாடு உள்ளதை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

கால புருஷனுக்கு 5 ஆமதிபதியும் பிரதான ஆண் கிரகமுமான சூரியன் உள்வட்டதிலும், வெளிவட்டத்திலும் முறையே கேதுவின் அஸ்வினி, மகம் ஆகியவற்றில் நிற்பதாலும், ஜாமச் சூரியன் கவிப்புடன் இணைந்துள்ளதாலும், இந்தப் பிரசன்னத்தில் ஆணை குறிக்கும் சூரியனும், செவ்வாயும் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறது. எனவே இத்தம்பதிக்கு குருவின் கருணையால் மட்டுமே குழந்தை பிறக்க வேண்டும். லாபஸ்தான குரு இங்கு மீனச் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெறுவதால் மற்றொருவர் உதவி மூலமே இந்தத் தம்பதிக்கு குழந்தை பிறக்கும். பரிவர்த்தனையால் சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெறுகிறார். சனி, புதன், ராகுவால் பாதிக்கப்பட்ட உள்வட்ட உதயாதிபதி சந்திரன் பரிவர்த்தனையாகி இணையும் குருவால் வலுக்கூடப் பெறுகிறார். ஜாமச் சந்திரன் துலாத்தில் திக்பலம் பெற்றுள்ளார். மற்றொரு பெண் கிரகமான ராகு மீனத்திற்கு வரும் குருவால் செயற்கை முறையில் கருத்தரிப்பிற்கு உதவுவார். இங்கு பெண்னை குறிக்கும் கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆணைக் குறிக்கும் கிரகங்கள் போல கடும் பாதிப்படையவில்லை என்பது கவனத்திற்குரியது.

உதயத்தில் நீசம் பெற்ற வீரிய காரகர் செவ்வாய் சனி சாரத்தில் அமைந்ததால் ஆணுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறைபாடும், அது நகரும் வேகமும் குறைவாக இருக்கும். பெண்ணை குறிக்கும் சுக்கிரன் வெளிவட்டத்தில் ராகுவின் சதயத்திலும், உள்வட்டத்தில் 8 ஆமதிபதி சனியின் சாரத்திலும் நிற்பதால் இயல்புக்கு மாறான வகையில்தான் குழந்தை கிடைக்கும் என்பது புரிகிறது. சுக்கிரன் மீனத்தில் நீசம் பெற்ற 3 ஆமதிபதி புதனுடன் இணைந்துள்ளது பெண்ணுக்கு தைராய்டு இருப்பதை குறிப்பிடுகிறது. (மூன்றாமிடம் = வீரியம், தைராய்டு) இவற்றை குறிப்பிட்டுச் சொன்னபோது தம்பதியர் ஆமோதித்தனர்.

எப்போது செயற்கை கருத்தரிப்பிற்கு செல்லலாம்?

வீரிய ஸ்தானாதிபதியான புதன் உள்வட்டத்திலும், வெளிவட்டத்திலும் மீனத்தில் நீசமாகியுள்ளதால் கோட்சாரத்தில் அவர் கன்னிக்கு வந்து உச்சமாகும்போது சிறப்பான காலமாக இருக்கும். அப்போது கோட்சார செவ்வாய் தனது நீசத்தைவிட்டு விலகி தனது ஆட்சி வீடான விருட்சிகத்தை நெருங்கியிருப்பார். அப்போது விரைவில் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் குருவின் பார்வையும் 5 ஆமதிபதி செவ்வாய்க்கு கிடைக்கவிருக்கும் இவ்வருட பிற்பகுதியில்  செயற்கை கருத்தரிப்பிற்கு செல்ல நன்று.

செயற்கை கருத்தரிப்பில் என்ன குழந்தை பிறக்கும்?

1௦ ல் சூரியன் உச்சத்துடன் திக்பலம் பெற்று குருவுடன் இணைந்திருப்பதாலும், பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் குருவின் பார்வை உதயத்திலமைந்த 5 ஆமதிபதி செவ்வாய்க்கும், 5 ஆமிடத்திற்கும் கிடைப்பதாலும் இத்தம்பதிக்கு ஆண் குழந்தைதான் கிடைக்கும். இதை மற்றொரு வகையிலும் உறுதி செய்துகொள்ளலாம். பரிவர்த்தனைக்குப் பிறகு குரு மீனம் சென்றாலும் அது பெண் ராசிதான் என்பதை நினைவுகொள்க. இதனால் பெண் குழந்தை பிறக்குமா? என்றால் மீன குரு பாலினத்தை மாற்றிவிடும் ராகுவுடன் இணைவதால் ஆண் குழந்தைதான் பிறக்கும் எனலாம்.

என்ன நட்சத்திரத்தில் குழந்தை?

கோட்சாரச் சந்திரன் புதனுடன் இணைந்து புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் இந்தத் தம்பதிக்கு புதனின் நட்சத்திரத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டும். செயற்கை கருவூட்டலில் ஒன்றுக்கு மேற்பட்ட கருவூட்டல் செய்யப்பட்டு அதில் ஒரு கருவே கருப்பையில் வளர்ச்சிக்காக வைக்கப்படும் என்பதை இரட்டை கிரகமான புதனையும், இரட்டை ராசியான மீனத்தையும் கோட்சாரச் சந்திரன் தொடர்புகொள்வதில் இருந்து அறியலாம்.

உச்ச, நீசக் கிரகங்கள் பிரசன்னத்தை பின்னணியில் இருந்து இயக்குபவை என்பதை அறிக. இங்கு செவ்வாய், சூரியன், புதனின் பங்கு இப்பிரசன்னத்தில் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும். உதயத்தில் 8 ஆமதிபதி சனி சாரத்தில் நீசம் பெற்ற செவ்வாய் செயற்கை கருத்தரிப்பில் கணவரின் உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு குறைவாகவும், தான உயிரணு மூலம் குழந்தை பெற அதிக வாய்ப்புள்ளதையும் குறிப்பிடுகிறது. உச்ச சூரியன் குருவுடன் இணைந்தது ஆண் குழந்தை பிறப்பதையும், கோட்சார சந்திரன் தொடர்பாகும் புதனின் நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கும் என்பதையும், புதன் குறிக்கும் இரு கருவூட்டல் செய்யப்பட்டு அதில் ஒன்று குழந்தையாக உருமாறும் என்பதையும் குறிப்பிடுகிறது. மீனத்தில் அமைந்த ராகு இரு கருவில் ஒன்றை துண்டித்துவிடுவார் என்பதை குறிப்பிடுகிறது. இதனால் சிறப்பான ஒரு கரு மட்டுமே வளர்ச்சிக்கு தேர்வு செய்யப்படும். 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

தேடல்கள்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை

மேலும் படிக்க »
கல்வி

Risk Assessment

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக

மேலும் படிக்க »
Tarot

That’s All Your Honour!

ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்

மேலும் படிக்க »
கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English