குல தெய்வமாக திருப்பதி பெருமாள்!

நமது குலத்தை காப்பதில் முன்னிலை வகுக்கும் தெய்வம் குலதெய்வம். பிழைப்புக்காக பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ள இன்றைய சூழலில், குல தெய்வ வழிபாடுகள் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன. புதிய தேசங்களில் சென்று தொழில் செய்யும் நிலையில், அடிக்கடி சொந்த ஊர் வர இயலாத சூழலில் குல தெய்வ அனுக்கிரகத்தை பெற, தங்கள் குல தெய்வ கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துசென்று அதைக்கொண்டு தங்கள் வாழிடங்களிலேயே குல தெய்வத்தை நிர்மாணித்து வழிபடுவது ஒரு பொது மரபு. இடம் பெயர்த்து பல ஆண்டுகளாகி கலாச்சார மாறுதலை அடைந்தவர்கள் கூட மீண்டும் அவர்கள் குல தெய்வத்தை அறிந்து வழிபடுவதே சிறப்பு. அவர்களது குல தெய்வம் வழிபாடு விடுபட்டு போன பிறகும் 166 ஆண்டுகள் வரை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கும். குல தெய்வமே தெரியாமல் போனவர்கள் தாங்கள் பிழைக்கும் ஊரின் தேவதையையே குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுவர். ஊர் தேவதையை வழிபட மனமற்றவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் முக்கியமாக வழிபடப்படும் தெய்வத்தையே குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுவர். குல தெய்வம் அறியாமல் ஆனால் சைவம், வைணவம் என மரபு வழி வழிபாட்டை பின்பற்றும் அன்பர்கள் சிவனையோ, பெருமாளையோ குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுவர். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் கடவுளான தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வெளியிடங்களில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அன்பர்கள் வழிபடுகிறார்கள். பொதுவாக குடும்பத்தில், பொருளாதாரத்தில் சங்கடங்கள் எழும்போதெல்லாம் தங்கள் குல தெய்வ அனுக்கிரகம் பற்றி சந்தேகிப்போர் பலர். அவர்களில் இப்படி மாற்று குல தெய்வத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு எழும் சந்தேகம் அதிகம். இது பற்றிய சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையிலானதே இன்றைய பதிவு.

நானூறு வருடங்களுக்கு முன் முன்னோர்கள் வட இந்திய பூர்வீகத்தைவிட்டு தமிழகத்தில் குடியேறினோம். எனவே குல தெய்வ வழிபாடு விடுபட்டுவிட்டது அதனால் திருப்பதி பெருமாளையே குல தெய்வமாக வழிபடுகிறோம். எங்களுக்கு பெருமாள் அனுக்கிரகம் உள்ளதா? அல்லது வேறு தெய்வத்தை வழிபடலாமா? என்று கேட்ட அன்பருக்காக பார்க்கப்பட ஜாமக்கோள் பிரசன்னமே நீங்கள் கீழே காண்பது.

மகர உதயம். உதயத்தில் சனி இருப்பது குல தெய்வ பிரசன்னம் என்பதை தெளிவாகக் கூறும். உடன் 8 ஆமதிபதி சூரியன் இருப்பது தற்போது செய்துவரும் தெய்வ வழிபாட்டை நிறுத்திவிடலாமா? என்ற கேள்வியாளரின் விரக்தி மனோபாவத்தை கூறுகிறது. இரண்டில் ஆரூடம் குருவின் சாரத்தில் இருப்பது கேள்வியாளரின் இந்த மனோபாவத்திற்கு பொருளாதார சூழலே காரணம் என்பதை கூறுகிறது. பத்தாமிடம் துலாத்தில் அமைந்த கிரகச் சேர்க்கைகள் பொருளாதார நெருக்கடி தொழில், முதலீடுகள், கடன் சார்ந்தது என்பதை தெரிவிக்கிறது. உதயத்தில் சூரியன் சனி சேர்க்கை. உதயத்திற்கு 10 ல் அமைந்த சூரியனை உதய சனி 10 ஆம் பார்வையாக பார்க்கிறார். சூரியன் சனி தொடர்பு கட்டுப்படுத்த இயலாத நிர்வாகச் செலவை குறிக்கிறது. 10 ஆமிட புதன், கேது இணைவுகள் கேள்வியாளர் IT துறையில் உள்ளதை கூறுகிறது. (புதன், கேது = IT). உதயாதிபதி சனி வெளிவட்டத்தில் 6 ல் நிற்கிறார். உதயத்திற்கு 10 ல் குரு கேது இணைவு நிர்வாக செலவை ஈடுகட்ட கேள்வியாளர் கடன் வாங்க எண்ணம்கொண்டிருப்பதை காட்டுகிறது.  பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் நமது பரிதவிப்பை தெய்வத்திடம் காட்டுவது இயல்பு. இவருக்கு தனது குல தெய்வத்தின்மீது அதிருப்தி எழுந்தது ஆச்சரியமல்ல. இங்கு கேள்வி பெருமாள் அனுக்கிரகம் பற்றியதே என்றாலும் அதன் பின்னணியையும் பிரசன்னம் தெளிவாகக் கூறுகிறது.

உதயத்தில் சூரியன். கேள்வியாளர் சௌராஷ்டிரர். சௌரம் என்பது சூரியனை குறிக்கும். அதாவது கேள்வியாளர் சூரியனை கடவுளாக வழிபடும் பண்டைய சௌராஷ்டிரா (இன்றைய ஒடிஷா) தேசத்திலிருந்து தமிழகத்தில் குடியேரியவர்கள். ஜாதகரது தாய்மொழி சௌராஷ்டிரம். உதயத்திற்கு நான்காமிடம் விட்டுப்போன மற்றும் அறிய இயலாத குல தெய்வத்தை குறிப்பிடும். நான்கில் கவிப்பு அமைந்தது, உதயத்தின் நான்காமதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் 6ல் அமர, வெளிவட்டத்தில் 12 ல் மறைந்தது ஆகியவை, முன்னோர்கள் காலத்தைய குல தெய்வ வழிபாடு மறக்கப்பட்டுவிட்டது என்பதை தெளிவாக கூறுகிறது. நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் இனி முந்தைய குல தெய்வத்தை வழிபட இயலாது என்பதை கவிப்பு தெளிவாக்குகிறது. அங்கு அமைந்த சந்திரன் ராகு சேர்க்கை முன்னோர்களின் பூர்வீக குல தெய்வம் பெண் தேவதையாக இருக்க வேண்டும் என்பதை கூறுகிறது. 4, 11 க்கு உரிய செவ்வாய் திருப்பதி பெருமாளை குறிக்கும் புதன் வீடான மிதுனத்தில் வக்கிரம் பெற்று அமைந்துள்ளார். இதனால்தான் கேள்வியாளர் திருப்பதி பெருமாளை குல தெய்வமாக வழிபடுகிறார்.  

தெய்வ அனுக்கிரகத்தை குறிக்கும் உதயத்திற்கு 9 ஆமிடத்தில் உச்சமான புதனை, மீன குரு நேர் பார்வை பார்க்கிறார். இது கேள்வியாளருக்கு அவரது தற்போதைய குல தெய்வமான திருப்பதி பெருமாளின் அனுக்கிரகம் பரிபூரணமாக உள்ளதை காட்டுகிறது. புதன் = பெருமாள். உச்ச புதன் = திருப்பதி பெருமாள். 9 ல் அமைந்த உச்ச புதன் கேள்வியாளரின் பரிசுத்த வழிபாட்டின் பலன் கேள்வியாளருக்கு தெய்வானுக்கிரகமாக திருப்பி அளிக்கப்படுகிறது என்பதை குறிப்பிடுகிறது. திருப்பதி பெருமாளை வழிபட்ட பிறகே உணவு உண்ணுதல், முக்கிய குடும்ப செயல்களை செய்கின்றனர் கேள்வியாளரின் குடும்பத்தினர்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

உங்கள் ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

தேடல்கள்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை

மேலும் படிக்க »
கல்வி

Risk Assessment

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக

மேலும் படிக்க »
Tarot

That’s All Your Honour!

ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்

மேலும் படிக்க »
கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English