கிரக வக்கிரம் – எது முக்கியம்?

வக்கிர கிரகங்கள் தமது காரகப் பலன்களை வழங்குவதில் தடைகளையும், தாமதத்தையும் கொடுத்தாலும் பலன்களை மறுப்பதில்லை. பலன் வழங்க அவை ஜாதகரின் தீவிர முயற்சியை எதிர்பார்க்கின்றன. தீவிரமாக முயலும் ஜாதகருக்கு தனது காரக அறிவை சிறப்பாக வழங்கிவிடுகின்றன என்றே கூற வேண்டும். அறிவு பலன் ஆகாது. தீவிர முயற்சியில் ஜாதகருக்கு தனது காரக பலன்களை வக்கிர கிரகங்கள் வழங்கினாலும், தமது காரகங்களுள் ஏதாவது ஒன்றில் அதிருப்தியை ஜாதகருக்கு அவை ஏற்படுத்திவிடுகின்றன என்றே கூற வேண்டும். வக்கிர கிரகங்களின் எந்த காரகம் ஜாதகருக்கு அதிருப்தியை வழங்கும் என அறிந்துகொள்வது மிக அவசியம். பொதுவாக அனைத்து கிரகங்களுக்கும் உயிர் காரகம் பொருள் காரகம் என இரு வகை காரகங்கள் உண்டு. உதாரணமாக ஆயுள் என்பது சனிக்கு உயிர் காரகம் என்றால், ஜீவனம் என்பது பொருள் காரகமாகும். இரண்டுமே மனிதனுக்கு முக்கியம். இரண்டிலும் மிக முக்கியமானது எனும் நிலை வரும்போது அது உயிர் காரகமாகத்தான் இருக்க வேண்டும். இதனடிப்படையில் வக்கிர கிரகங்கள் ஜாதகத்தில் அமைந்த நிலைக்கேற்ப எந்த காரகத்துவத்தை ஜாதகருக்கு வழங்க வேண்டும், எந்த காரகத்துவத்தை தடுக்க வேண்டும் என முடிவு செய்து செயல்படுகின்றன. ஒரு கிரகத்தின் செயல்பாடு அதன் தசா-புக்திகளில்தான் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொடுக்கும் என்றாலும், காரக அடிப்படையில் அனைத்து தசாபுக்திகளிலும் தனது காரக பலனை ஒரு ஜாதகருக்கு கொடுக்கவோ அல்லது மறுக்கவோ அவற்றால் இயலும். ஏனெனில் எந்த தசா கிரகமானாலும் ஒரு காரகனின் அனுமதி இல்லாமல் மற்றொரு கிரகத்தின் காரக பலனை ஜாதகருக்கு வழங்க இயலாது.  உதாரணமாக சனியின் அனுமதியின்றி எந்த ஒரு கிரகமும் ஜாதகனின் ஆயுளை பறித்துவிட  இயலாது. இந்நிலையில் வக்கிர கிரகங்கள் நேர்கதி கிரகங்களைபோல பலன்களில் பெருந்தன்மையோடு செயல்படாது அதிருப்தியுடன் செயல்படும். ஆனால் அந்த அதிருப்தி அந்த வக்கிர கிரகத்தின் ஓரிரு காரகங்களில் மட்டுமே வெளிப்படும். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு. 

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

மகர லக்ன ஜாதகி. ராகு-கேதுக்கள் வர்கோத்தமம். 9 பாகைகள் சூரியனைவிட்டு விலகி இருப்பதால் சனிக்கு அஸ்தங்க தோஷம் கடுமையாக இல்லை. மாறாக உச்சனுடன் இணைந்ததால் சனி நீச பங்கமடைகிறார். 8 ஆமதிபதி சூரியனால் லக்னாதிபதி நீசபங்கமடைவதால் ஜாதகிக்கு ஒரு பாதிப்பின் பேரில் மென்மையான வாழ்வு ஏற்படும். ஜாதகத்தில் குரு குறைந்த பாகைபெற்ற கிரகமாகி சூரியன் அதிக பாகைபெற்ற கிரகமாக உள்ளது. இவ்விரு கிரகங்களால்தான் ஜாதகிக்கு சிறப்புக்களும் பாதிப்புகளும் ஏற்படும். 7 ஆமிடத்தில் ஆட்சிச் சந்திரன் மாமனை குறிக்கும் புதனின் ஆயில்யத்தில் ஆட்சி பெற்று நவாம்சத்தில் 7 ஆமிடமான கன்னியில் திக்பலம். இந்த அமைப்பால் ஜாதகி தாய் மாமனை மணந்தவர்.

ஜாதகத்தில் புதன், குரு ஆகிய இரு கிரகங்கள் வக்கிரம் பெற்று அமைந்துள்ளன. புதன் லக்னாதிபதியுடன் சுக ஸ்தானத்தில் இணைந்ததும் ஜாதகத்தில் செவ்வாய்-சுக்கிரன் இணைவும் ஜாதகிக்கு நிறைவான குடும்ப வாழ்வை தந்துள்ளன. 7 ஆமிடத்தில் சந்திரன் ஆட்சி பெற்றதால் கணவருக்கு வெளிநாட்டு வியாபாரத்தில் நல்ல லாபகரமான தனவரவு. அடுத்த வக்கிர கிரகம் குரு.  1௦ ஆமிடத்தில் வக்கிரமாகி குறைந்த பாகைபெற்ற குரு நிறைவான குடும்பம், தனச் சிறப்பு மிக்க வாழ்வு ஆகியவைகளை அளித்துள்ளது. வக்கிர குரு 2, 4 ஆகிய இடங்களை பார்ப்பதால் சிறந்த தனவரவுடன் வீடு வாகன வசதிகளும் மிகச் சிறப்பாகவே ஜாதகிக்கு அமைந்தது. இதனால் குருவின் மற்றொரு காரகமான புத்திர வகை பாதிப்பு உண்டா? என பார்க்க வேண்டும். சப்தாம்சம் எனும் வர்க்கச் சக்கரம் ஒருவரின் புத்திர வகை கொடுப்பினைகளை தெளிவாக நமக்குக் கூறும் என்பதால் சப்தாம்சத்தை ஆராய்வோம் வாருங்கள்.

சப்தாம்சத்தில் ராசி லக்னத்திற்கு சப்தாம்ச லக்னம் 8 ஆமிடத்தில் அமைந்தது புத்திர வகை சிறப்புகள் ஜாதகிக்கு இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடும் அமைப்பாகும். சப்தாம்ச லக்னாதிபதி சூரியன் நீசமானது கடும் பாதிப்பு. கர்ப்பப்பையை குறிக்கும் சந்திரன் உச்சம் பெற்றாலும் ராகுவுடன் இணைந்தது பாதிப்பே. புத்திர காரகர் குரு சிம்ம லக்னத்திற்கு 5 க்கும் 8 க்கும் உரியவராகி 5 க்கு 12 ல் கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் கேதுவுடன் இணைந்து கெட்டுவிட்டார். இதனால் இந்த ஜாதகிக்கு புத்திர வகை கொடுப்பினைகள் இல்லை என்பதே தெளிவாக உள்ளது. வக்கிர கிரகமான குருவின் பங்கு இதில் என்ன? என அறிய தசா-புக்திகளை ஆராய்வோம். ஜாதகி குழந்தைப்பேறு காலத்தில் வளமையான சுக்கிர தசையை கடந்து வந்தவர். ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு பிருகு மங்கள யோகமாகும். தம்பதிகளுக்கும் சிறந்த அன்னியோன்யத்தை இது ஏற்படுத்தும். சுக்கிர தசை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும். 2, 4, 6 ஆகிய பாவகங்களையும் குரு பார்த்ததால் ஜாதகிக்கு திருமண வாழ்வில் வளமை கூடியது. 2 ஆமிட பாவியான ராகு குரு பார்வை பெற்றதால் சிறப்படைகிறார். இது பொருள் காரகத்திற்கு சிறப்பை தரும். சுக்கிரன் தனது தசையில் பொருளாதாரத்தில் ஜாதகியை கோடீஸ்வரியாக்கியது. செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன் ஜாதகிக்கு சிறந்த வீடு, வாகன வசதிகளை வழங்கியது.

ஜாதகி சுக்கிர தசையில் குரு பார்த்த 2 ஆமிட ராகு புக்தியில் கருத்தரித்தார். ஆனால் ஜாதகிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டுவிட்டது. வக்கிர கிரகம் ஒருவர் மனநிலையில் நின்று செயல்படும். வக்கிர கிரகம் பற்றிய தெளிவான நோக்கம் ஒரு ஜாதகருக்கு இருக்கும். வக்கிர கிரக காரகங்களில் மற்றவர் கருத்தை ஜாதகர் கேட்க மாட்டார். இங்கேதான் விதி விளையாடும். வக்கிர கிரகம் உயிர் பொருள் ஆகிய இரு காரகங்களையும் ஜாதகர் முன் வைக்கும். வக்கிரம் அதீத பிடிவாதம் எனும் அமைப்பில் வருவதால் இரு காரகங்களில் ஜாதகர் எந்த காரகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறாரோ   அதில் பிடிவாதமான பலனை வழங்கிவிட்டு மற்றொரு காரக பலனை மறுத்துவிடும். இந்த ஜாதகி கருக்கலைப்பு ஏற்பட்ட பிறகு தனது வளமையான வாழ்வில் லயித்தவர் குழந்தை விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குரு இவரை மேலும் சில கோடிகளுக்கு வளமைகளை கொடுத்துவிட்டு உயிர் காரகமான புத்திரப் பேறை  மறுத்துவிட்டார். தற்போது ஜாதகி சுக்கிர தசையை கடந்து, சூரிய தசையும் கடந்து, சந்திர தசையின் இறுதியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை கடந்து தனது 5௦ வயதுகளில் இருக்கிறார்.

ஒருமுறை கருத்தரித்தவர் உரிய சிகிச்சையில் தனது புத்திரப் பேறை தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்காமல் பொருளாதாரத்தில் தன்னை மறந்துவிட்டார். இதனால் நமக்கு எது முதலில் முக்கியம் என்பதில் தெளிவு வேண்டும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

தேடல்கள்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை

மேலும் படிக்க »
கல்வி

Risk Assessment

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக

மேலும் படிக்க »
Tarot

That’s All Your Honour!

ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்

மேலும் படிக்க »
கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English