தோழன் – பகுதி இரண்டு

சென்ற பதிவின் தொடர்ச்சி…

ஒரு ஜாதகரின் உள்ளுணர்வைத்தூண்டி,   கர்மாவின் அடிப்படையில் அவரை வழிநடத்தும் கிரகத்தை  The Signature Planet என்று அழைக்கிறோம் என்று சென்ற பதிவில் பார்த்தோம். குறிப்பிட்ட அக்கிரகத்தை தோழன் கிரகம் என்று நாம் அழைக்கலாம் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தோழன் ஒரு ஜாதகத்தில் எந்த நிலை  பெற்றிருந்தாலும் ஒருவரை வழி நடத்தும். அது சாதகமா?  பாதகமா?  என்பதை ஒட்டுமொத்த ஜாதகமே தீர்மானிக்கிறது.  எது எப்படியாயினும் தோழன் ஒருவரின் இறுதிக்காலம் வரை துணை வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.பொதுவாக கிரக வலுவை திக்பலம், மூலத்திரிகோணம், உச்சம் போன்ற பல வகைகளில் அளவிடுகிறோம் என்றாலும் தோழன் கிரகம் இந்த வகைப்பாடுகளில்தான் அமையும் என்ற அவசியமில்லை. ஆனால் இத்தகைய அமைப்புகளை சார்ந்து  செயல்படுகிறது என்பதே உண்மை. கூடுதலாக தோழன் என்பவன் நமது மனதிற்கு இணக்கமானவர் என்ற அடிப்படையில் 4, 5 ஆம் பாவங்களை சார்ந்தே செயல்படுகிறது.  4 ஆம் பாவம் 5 ஆம் பாவத்தைவிட தோழனின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.   இன்றைய பதிவில் சில உதாரண ஜாதகங்களுடன் தோழன் கிரகத்தின் செயல்பாடுகளை ஆராய்வோம். 

இந்திராகாந்தி மறைவுக்குப்பிறகு தடுமாறிக்கொண்டிருந்த நமது இந்திய தேசத்தை பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே சரியான பாதையில் செலுத்தியவர். நெருக்கடிகளுக்கு காரணம், திக்பலத்தை தரும் சூரியனும் செவ்வாயும் விரையாதிபதியும் அஷ்டமாதிபதியுமானதுதான். திக்பல கிரகங்கள் தங்கள் ஆதிபத்தியத்தை மீறி செயல்படும் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு உதாரணம். சூரியன் செவ்வாய் ஆகிய இருவரும் லக்னாதிபதியுடன் ராஜ்ஜிய ஸ்தானத்தில் இணைகிறார்கள். அதோடு இவ்விருவரின் உப நட்சத்திராதிபதியும் புதனே. இதனால் செவ்வாய் திசையில் இவர் பிரதமராக பணியாற்றினார். செவ்வாய் அஸ்தங்கமானாலும் சூரியனைவிட அதிக பாகை பெற்றதால் இந்த ஜாதகத்தில் தோழன் கிரகமாகிறார். செவ்வாய் 4 ஆம் பாவத்தை நேர் பார்வை பார்க்கிறார். செவ்வாய் இங்கு சூரியனின் காரகத்தையும், புதனின் காரகத்தையும் தான் ஏற்று செயல்படுகிறார். ஆனால் 8 ஆமதிபதி என்ற அடிப்படையில் சில நெருக்கடிகளையும் ஜாதகருக்கு கொடுத்தார்.  நெருக்கடிகளை கையாள  ஜாதகர் மேற்கொண்ட “மௌனம் கலக நாஸ்தி” என்ற முறை இவரது காலத்தில் மக்கள் கவனம் ஈர்த்தது. லக்னாதிபதி ராஜ்ய ஸ்தானத்தில் திக்பல கிரகங்களைவிட அதிக பாகை பெற்றதும், தனது பதவியை விட தனது செயல்களில் பின்வாங்காத தன்மையை இவருக்கு வழங்கியது. திரு.நரசிம்மராவ் முன்னெடுத்த பொருளாதார முயற்சிகளுக்காக கட்சி பேதம் கடந்து இன்றும் நன்றியோடு நினைவு கூறப்படுகிறார். 

சுக ஸ்தானத்தில் லக்னாதிபதி புதன் ஆட்சி, உச்சம்,  மூலத்திரிகோணம். இதனால்  இந்த ஜாதகத்தில் புதனே தோழன் கிரகமாகிறார். பாதகாதிபதியை விட லக்னாதிபதி அதிக பாகை பெற்று வலுவடைகிறார். இதனால் லக்னாதிபதி புதன் 1௦ ஆமதிபதி குருவிற்கு தனது காரகங்களை திணிக்கிறார். இவர் ஒரு நல்ல ஆய்வு ஜோதிடராக திகழ்ந்தார். தோழன் கிரகம் தனது 1௦ ஆமதிபதியோடு இணைந்து 1௦ ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரக தொழிலை சிறப்பாக ஜாதகருக்கு வழங்கியுள்ளார்.

மோட்ச ராசிகளில் மூன்றாவது ராசியில் பிறந்தவர் இவர். லக்னத்தில் புதன், சுக்கிரனின் சாரத்தில் நின்று 7 ஆம் பாவத்தை பார்க்கிறார்.களத்திர காரகர் சுக்கிரனும் 7ம் அதிபதி சனியும் பலகீனமாகியுள்ளனர். இதனால் இவர் ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்தார். ஆனால் லக்னாதிபதி சூரியன், மோச்ச பாவமான 12 ஆமிடத்தில் மோட்ச ராசி கடகத்தில் நின்று சூரியன் நின்ற வீட்டோன் சந்திரன் கால புருஷ 12 ஆமிடமான மீனத்தில் நிற்கிறார். இந்த அமைப்பால் இவரது மனம் மோட்சப்பாதயையே நாடுகிறது.   களத்திர காரகர் சுக்கிரனும், 7 ஆமதிபதி சனியும் 12 ல் நிற்கும் சூரியனின் சாரத்திலேயே அமைகிறார்கள்.  சூரியன் இதில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகராகிறார். சுக்கிரன் குறைந்த பாகை பெற்று தாரா காரகராகிறார். இதனால் இவை இரண்டும் இணைந்து செயல்படும். இதனால் இவரது இரு மனைவிகளும் இவரது ஆன்மீகத்திற்கு உடன்படுகிறார்கள். லக்னத்தில் அமைந்த கால புருஷ போக  ஸ்தானாதிபதி புதன் 12 ல் அமைந்த சூரியனுடன் நட்சத்திரப்பரிவர்த்தனை ஆகிறார். இதனால் சூரியனுக்கு லக்னத்தின் மீதும், 12 ஆமிடம் மீதும் ஆளுமை அதிகமாகிறது. இந்த ஜாதகத்தில் சூரியன் தோழன் கிரகமாகிறார். 4 ஆமதிபதி செவ்வாய் லக்னாதிபதி சூரியனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜாதகத்திற்கு உரியவர் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள். 

இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சனி, ராகு-கேதுக்கள் ஆகிய மூன்று கிரகங்கள் உச்சம். அது மட்டுமல்ல சனி, ராகுவின் சாரத்திலும், கேது சனி சாரத்திலும் அமைகிறார்கள். இதனால் உச்ச கிரகங்கள் மூவரும் ஒருங்கிணைந்து செயல்படுவர். இதில் லக்னாதிபதி சாரம் பெற்ற கேது லக்னாதிபதியை நோக்கி வருகிறார். இதனால் லக்னாதிபதிக்கு ராகு தொடர்பை விட கேது தொடர்பே அதிகம்.  ஜாதகருக்கு 12 அமைந்த கேது சாரம் பெற்ற குரு தசா முடிந்து, தற்போது சனி தசா துவங்கியுள்ளது. சனி சாரம் பெற்ற கேது சனியை முழுமையாக கட்டுப்படுத்துவார். இந்த ஜாதகர் பல்லாண்டுகளாக ஜப்பானில் பணிபுரிகிறார். ஜப்பானை குறிப்பது கேதுவாகும். இந்த ஜாதகத்தில் கேதுவே தோழன் கிரகமாகிறார். கேது லக்னாதிபதி சனியோடும், 4 ஆமதிபதி செவ்வாயோடும் தொடர்பாகிறார்.

மேற்கண்ட உதாரண ஜாதகங்களை நோக்கினால் தோழன் கிரகத்தைப்பற்றிய ஒரு உண்மை தெரியவரும். அது தோழன் கிரகம் லக்னத்துடனோ அல்லது லக்னாதிபதியுடனோ தொடர்பில் இருப்பதுதான். மேலும்  தோழனின் ஆதிக்கம் 4, 5 ஆம் பாவம் அல்லது அதன் அதிபதியோடு ஏதோ ஒருவகை தொடர்பில் இருக்கிறது என்பதுதான்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

Calm yourself. The storm will pass.

காலம் சுழன்றுகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையும் புதுப்புது சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் களத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உண்மை, நேர்மை, உழைப்பு இவற்றைவிட, இவற்றால் அடையும் பலன் என்ன? என்பதே தற்காலத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

Decoding பாதகாதிபதி!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி காரகங்கள் உண்டு.  ஒவ்வொரு பாவகத்திற்கும் தனியான காரகங்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு ராசியும் தனக்கான இயல்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணாதியசங்கள் உண்டு. ஒரு காரக கிரகம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

டிரம்பாட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தால் மட்டும் போதும், தாய் நாட்டில் இல்லாத வளமைகளை மேலை நாடுகளுக்கு சென்று நமது கல்வியறிவால் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வின் அதிக பட்ச வசந்தங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பொதுவாக

மேலும் படிக்க »
இந்தியா

Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று

மேலும் படிக்க »
இந்தியா

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English