மீண்டும் மீண்டுமா?

சில வருடங்களுக்கு முன் வந்த நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் ஒன்றில் காதலியை பெற்றோர்கள் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட பிறகு, இரு தரப்பு பெற்றோர்களின் பாரம்பரிய சம்பிரதாயத்திற்காக  மீண்டும் இருமுறை திருமணம் செய்வார். அப்படம் மன ஒற்றுமையைவிட சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தரும் இக்காலத்திற்கு ஒவ்வாத பழைய பழக்கங்களை கேலி செய்திருந்தது. திருமணப்பொருத்த மூல நூல்களுள் ஒன்றான மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட “ஜாதக சந்திரிகை”யில் (வெளியீடு: தஞ்சை சரஸ்வதி மஹால், பக்கம் 98 ல் )  இப்படி ஒரு ஸ்லோகம் வருகிறது. 

இதன் பொருளாவது அனைத்து பொருத்தங்களையும் விட மனப் பொருத்தத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் காளிதாசர். இந்த நூல் எழுதப்பட்ட காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு. மேற்கூறியபடி ஒருவர் மீண்டும் மீண்டும் ஒருவரையே திருமணம் செய்வதற்கான அமைப்புகள் என்ன என்று ஆராய்ந்ததன் விளைவே இன்றைய பதிவு. 

கீழே ஒரு ஆணின் ஜாதகம். 

ஒரு விஷயத்தை ராசி என்பது மேலோட்டமாக கூறினால் தொடர்புடைய வர்க்கச் சக்கரம் அதை விவரித்துக் கூறும். உதாரணமாக  ஒருவருக்கு திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளதை  ராசி குறிப்பிட்டால் அதன் வகையை  நவாம்சம் விரிவாக கூறும்.மேற்கண்ட இளைஞரின் ஜாதகத்தில் நீச சுக்கிரன் 7 ல் இருக்கிறார். ஒரு நீசன் 7 ல் இருப்பதால் திருமண விஷயத்தில் ஏதோ ஒரு தரமற்ற தன்மை இருக்கும் என்பதை இது குறிக்கிறது. ஜாதகரின் பாரம்பரியத்தை கூறும் 9 ஆம் பாவத்திற்கு விரைய பாவாதிபதி சுக்கிரன் 7ல் இருப்பதால் களத்திர காரகர் களத்திர பாவத்தில் நீசம் பெற்றதால் களத்திரம் இவரது பாரம்பரியத்தை விட மாறுபட்டதாக அல்லது குறைவானதாக இருக்கும் என்று பொருள். 7 ஆமதிபதி புதன் 5 ல் இருப்பதால் இவருக்கு காதலியே மனைவியாக வரும் அமைப்பு உள்ளது. 7 ஆமதிபதி 6 ஆமதிபதியுடன் இணைந்து 5 ல் நிற்பதால் இவரது மனைவியை வேலை செய்யும் இடத்தில் கண்டு காதலித்து மனம் புரிவார் என்பதை இவ்வமைப்பு கூறுகிறது. 2 ல் கேது, 8 ல் ராகு நிற்க, 5 ஆமதிபதியும் லக்னாதிபதியும் 8 ல் ராகுவுடன் இணைவது இவர் காதலுக்காகவும் திருமணத்திற்காகவும் தனது பாரம்பரியத்தை விட்டு வேறு பாரம்பரியத்தில் இணைவதை குறிப்பிடுகிறது. 

நவாம்சத்தில் காதலின் காரக கிரகமும் காதல் பாவகமான 5 ன் அதிபதியுமான புதன் 2 ல் நீசம் பெற்று நிற்கிறார். இது ஜாதகரின் காதல் தரமற்றது என்பதை கூறினாலும் காதலி ஜாதகருடன் குடும்ப உறவில் வந்து இணைவதை குறிப்பிடுகிறது. சனியுடனான பரிவர்த்தனைக்குப்பிறகு ஆட்சி பெறும் குரு, புதனை நீச பங்கப்படுதுவதால் இவரது காதலி மனைவியான பிறகு அவரது தகுதி  உயரும்.   ஒரு அந்நிய பாரம்பரியம் தனது குடும்பத்தில் வந்து இணைகிறது என்றால் குடும்ப பாவகத்தில் ராகு-கேதுக்களோ அல்லது 8 ஆமதிபதியோ தொடர்பாக வேண்டும். இந்த வகையில் குடும்ப பாவத்தில் 5, 8 ஆமதிபதி புதன் அமர்வது காதலுக்காக அந்நிய கலாசார துணைவர் ஜாதகரது குடும்பத்தில் இணைவதை தெளிவாக்குகிறது.   சனி, குருவோடு பரிவர்த்தனை, குடும்பத்தில் நிகழும் இந்த கலாச்சார மாறுபாட்டை உறுதி செய்கிறது. ராசியை மட்டும் வைத்து  இதை தெளிவாக அனுமானிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. நவாம்சம் ஜாதகரின் சூழலை துல்லியமாக காட்டுகிறது. 

ஆனால் இவ்வமைப்புகள் செயல்பட தசா-புக்திகள் அனுமதிக்க வேண்டும். தசா-புக்திகள் அனுமதிக்காவிட்டால் ஜாதக அமைப்புகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தசா-புக்தி தொடர்பாகாத ஜாதக யோகங்கள் வீண் என மகாகவி காளிதாசர் பின்வரும் தனது ஜாதக சந்திரிகை பாடலில் கிண்டலடிக்கிறார்.  

இப்போது ஜாதகருக்கு சம்பவங்கள் நடக்க தசா-புக்திகள் அனுமதிக்கிறதா என காண்போம். 

ஜாதகருக்கு சனி தசை 2௦11 முதல் நடப்பில் உள்ளது. 1994 ல் பிறந்த ஜாதகருக்கு படித்தவுடன் வேலை கிடைப்பதை குரு தொடர்பு பெற்ற ஜீவன காரகர் சனியின்  தசை உறுதி செய்கிறது.  இதன்படி படித்தவுடன் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. சனி தசையில் நவாம்சத்தின் 5 ஆமதிபதி புதன் புக்தியில் ஜாதகர் வேலை செய்யும் இடத்தில் காதலி வந்து இணைந்து காதல் புரிய வைக்கிறார். புதன் புக்தியை அடுத்து வந்த கேது புக்தி பாரம்பரிய மற்றும்  கலாசார மாறுபாட்டால் குடும்பம் அமைவது தடைபடுவதை குறிக்கிறது. 1௦ ஆமிட கேது புக்தியை திருமணதிற்கு சிறப்பல்ல. அடுத்து களத்திர காரகர் சுக்கிரன் முதல் காமத்திரிகோணத்தில், காதல் பாவகம் 5 க்கு லாபம் 3 ல்  சந்திரன் சாரத்தில் உள்ளார். சந்திரன் 2 ஆமிடத்தில் நிற்கிறார். இதனால் இப்போது ஜாதகருக்கு திருமணம் நடக்க வேண்டும். சுக்கிரன் ராசியிலும் 7 ல் நிற்கிறார் என்பதால் அவர் 7 ஆமிட பலனை வழங்கியாக வேண்டும் என்ற அடிப்படையில் ஜாதகருக்கு சுக்கிர புக்தியில் புதன் அந்தரத்தில் கடந்த ஆண்டு தை மாதம் திருமணம் நடந்தது. 

ஒரே துணையுடன் மீண்டும் திருமணம் நடக்க ஜாதக அமைப்பு.

களத்திர காரகரோ, களத்திர பாவாதிபதியோ இரட்டை கிரகமான புதன் தொடர்பு பெற்று, இரட்டை ராசிகள் எனப்படும் மீனம், மிதுனம் தொடர்பில் நின்றால் அத்தகைய ஜாதகர்களுக்கு திருமணம் ஒரே துணையுடன் இரு முறை நடக்கும். இது இரு தார யோகத்தையும் குறிப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே துணையுடன் இரு முறை திருமணம் நடந்தால் இத்தகைய இருதார யோகம் செயல் இழக்கும்.

இந்த ஜாதகத்தில் நவாம்சத்தில் குடும்ப பாவகம் இரட்டை ராசியாக அமைகிறது. இவருக்கு சுக்கிர புக்தியில் புதன் அந்தரத்தில்தான் முதலாவதாக திருமணம் நடந்தது. இரட்டை கிரகமான புதன் ஒரு செயலுக்கு பொறுப்பேற்கிறார் எனில் அச்செயலை இருமுறை நடத்தி வைப்பார். நவாம்சத்தில் சூரியனான தந்தையும் தாயான சந்திரனும் இரட்டை ராசி மீனத்தில் இருக்க ஜாதகத்தில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகராக நிற்கும் புதன் மீனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனடிப்படையில் இந்த இளைஞருக்கு சந்திர புக்தியில் மீண்டும் அதே துணையுடன் பெற்றோர்கள் விருப்பத்திற்காக பாரம்பரிய முறைப்படி தடபுடலாக மீண்டும் திருமணம் வைகாசியில் (ஜூன்’ 22) ல் நடந்தது. 

என்னே கிரக லீலைகள்!

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம், 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

சுயதொழில் எனும் புதிய பயணம்: அடிமைத் தளையிலிருந்து ஆளுமைப் பாதைக்கு!

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது

Loading

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.” ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English