பெண்

பெண்

இன்றைய காலத்தில் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றால் அதற்கு ஆச்சார்ய கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும். 
இதில் குரு தன, குடும்ப காரகன் என்றால் அதை வளமையாக அனுபவிக்க சுக்கிரனே காரணமாகிரார். குரு வலுவாக இல்லாதிருந்து சுக்கிரன் வலுவாக அமைந்துவிட்டால் கூட அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.  பெண்கள் மகிழ்வாக இருக்கும் குடும்பத்தில் மகாலகஷ்மி வாசம் செய்கிறாள். பெண் கண்ணீர் சிந்தினால் அந்த வம்சத்தில் அதற்கு காரணமானவர்களை சுக்கிரன் தண்டிக்கிறார். இதை ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை கண்டு அறியலாம்.


“எங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லையோஎங்கே பெண்மைக்கு மதிப்பில்லையோஎங்கே பெண்கள் வஞ்சிக்கப்படுகிரார்களோஅது மக்கள் வாழத்தகுதியற்ற பூமியாகும்”
என நமது நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன.
பெண் மனித வாழ்வின் இன்றியமையாத சக்தி.
சக்தி இல்லையேல் சிவமில்லை.
பெண் இல்லாத வாழ்க்கை பட்டுப்போன மரத்திற்குச்சமம்.
இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தற்கொலை செய்துகொல்பவர்களை தினசரிகளில் படிக்க முடிகிறது.
இது போன்ற நிலைக்கு 80 களில் துவங்கி 90களில் புற்றீசல்களாக உருவெடுத்த பாலினத்தை அறியும் மையங்களும் தவறான மருதுவர்களுமே காரணம். அதை நாடிச்சென்று தங்கள் பெண் செல்வங்களை அழித்தவர்களின் சந்ததியினரே இன்று பெரும்பாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
பெண்களை துன்புறுத்தினால் அல்லது அழித்தால் அவர்களது சந்ததியினருக்கு பெண் வகையில் குடும்ப சந்தோஷங்களோ பெண் வாரிசுகளோ இல்லாததை அல்லது மிகத்தாமதமாக அமைவதை காண முடிகிறது. ஒருவர் பெண்களுக்கு இழைக்கும் தீங்குகள் அவரை மட்டுமின்றி அவரது வம்சத்தையும் கடுமையாகவே பாதிக்கின்றன.
பெற்றவர்களின் பாவம் பிள்ளைகளை சேறும் என்பது மிகச்சரியான அனுபவ மொழியாகும்.
ஒருவர் அவருக்கு கேடு செய்யும் செயல்களை செய்யக்கூடாது என்பதுடன் அவரது சந்ததியினருக்கு செல்வங்களை சேர்த்து வைக்காமல் விட்டாலும் பரவாயில்லை. அவரது சந்ததியினருக்கு பாவங்களை தேடிவைதுவிட்டு செல்லக்கூடாது.
இது வெறும் பயமுறுத்தல் அல்ல.
பெண்களுக்கு பாதகம் செய்தவர்களின் சந்ததியினரின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். அவர்களது ஜாதகங்களை பெற்று ஆய்வு செய்து பாருங்கள். சுக்கிரன் எப்படி அமைத்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். நான் சொல்வதன் உண்மை உரைக்கும்.

பெண்களை வஞ்சிக்க துணை நின்றவர்கள், மருத்துவர்கள் அதை சார்ந்தவர்கள், கற்புடைய மங்கையரைப்பற்றி பழி சொன்னவர்கள் போன்றவர்களையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.

இது போன்ற செயல்களை செய்தவரின் சந்ததியினர் இராமேஸ்வரத்தில் மூன்றுமுறை தில ஹோமம் செய்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.
வீட்டுப்பெண்களை கண்ணீர் சிந்தவைத்துவிட்டு அம்மன் கோவிலில் அக்கினிச்சட்டி எடுப்பதில் அணுவளவும் பயனில்லை என்பதை உணருங்கள்.

முக்கியமாக தொடர்புடையவர்களை மட்டுமின்றி அவர்களின் சந்ததியினரையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.  

மேற்கண்ட பெண்மணியின் ஜாதகத்தில் குரு உச்சமாகி வக்கிரமான நிலையில் இருக்கிறார். ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமானால் நீச்சத்திற்கொப்பான பலனையே தரும். இவ்விதிப்படி குடும்ப பாவமான 2 க்கு விரயத்தில் அமைந்த குரு திசையில் ராகு புக்தியில் ஜாதகி கணவரை இழந்தார். ராகு கணவரை குறிக்கும் 7 ஆமிடத்திற்கு சுகஸ்தானம் 1௦ உடனும், 7 ஆமிடத்திற்கு பாதக ஸ்தானமான 5 உடனும் தொடர்புகொண்டுள்ளது. (7 ஆமிடம் சர ராசியாகியதால் 7 க்கு 11 ஆன விருச்சிகம் பாதக ஸ்தானம் ஆகும்).   
கணவரை இழந்தபின் மருமகளை மாமனாரே அடைய எண்ணினார். இதற்கு தந்தை மற்றும் மாமனாரை குறிக்கும் சூரியன் காம களத்திர ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்ததே காரணமாகும். ஜாதகி கணவர் குடும்பத்தை விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார்.
சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகமாகி அது தொடர்புகள் ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்து லக்னத்தை பார்த்ததால் ஜாதகிக்கு அரசுப்பணியையும் முன்னமே கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற குரு ஐந்தாமிடத்தை பார்த்ததாலும் ஐந்தாமதிபதி செவ்வாய் 5 க்கு விரயத்தில் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டதாலும் கணவர் வகை தொடர்புகளின் இந்த செயல் இவர்களது வம்சத்தை பாதித்தது.
எப்படி எனில்.ஜாதகியின் மகன் வேற்று ஜாதியில் மணமுடித்து தனது குல மரபுகளை விட்டு விலகிவிட்டார். எனினும் ஜீவன ரீதியாக கடினமான சூழ்நிலையிலேயே உள்ளார். ஜாதகியின் மகள் வேற்று குலத்தை சார்ந்தவரை காதலித்து மணமுடிக்க தயாராக உள்ளார்.
ஜாதகத்தில் 5, 9 மற்றும் அதன் பாவாதிபதிகளும் குருவும் கெட்டுவிட்டால் ஒருவர் தனது குலத்தை விட்டு விலகுகிறார் அல்லது தனது குல மரபுகளுக்கு மாறாக நடக்கிறார்.
கீழே வருவது ஒரு ஆணின் ஜாதகம் 

கன்னி லக்னத்திற்கு 7 ல் விரயாதிபதியும் தந்தையை குறிக்கும் கிரகமும் ஆன சூரியன் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்து 6 ஆமதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். தனம் மற்றும் தந்தையை குறிக்கும் 2 , ஒன்பதாம் பாவாதிபதியான சுக்கிரன் விரயாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியுடன் இணைந்து குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். அஷ்டமாதிபதியான செவ்வாய் தனது கடும் பகைவனும் 5, 6 ஆம் பாவாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார்.
இவர்கள் நின்ற நட்சத்திராதிபதிகளும் பாவாதிபதிக்களுமான குருவும் சனியும் வக்கிரமாகி தங்களது இயல்பை இழந்த நிலையில் மேற்கண்ட மூவரையும் பார்வை செய்கின்றனர்.
ஜீவன காரகன் சனியும் தன காரகன் குருவும் வக்கிரகமாகி தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் நிற்பதும் லக்னாதிபதி புதன் ஆறாமதிபதி சனியுடன் பரிவர்த்தனை ஆகி 6 ல் நின்றதும் ஜீவனம் மற்றும் ஆரோக்ய ரீதியாக கடும் போராட்டங்களை ஜாதகருக்கு தந்துகொண்டிருக்கிறது.
ஜாதகரின் இந்த நிலைக்கு கீழ்வரும் தந்தையார் வகை கர்மங்களே காரணமாகும்.
ஜாதகரின் தந்தையார் அபலைப்பெண் ஒருவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கற்பவதியாக்கி கைவிட்டார். பிறந்த குழந்தை தமதில்லை என்று வாதிட்டார். நீதிமன்றத்தில் மரபுக்கூறு சோதனையில் குழந்தைக்கு தந்தை அவரே என்று நிரூபணமாகி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. 
ஜாதகரின் தாயார் ஒரு மாதம் ஜீவனாம்சம் பெற்ற பிறகு அவரது தந்தை ஜாதகியை வேறு ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். இப்போது மகன் விரும்பினாலும் தாயாரை தொடர்புகொள்ள இயலாத நிலை. ஜாதகர் ஜீவனம் ஆரோக்கிய வகை போராட்டங்களால் மனம் நொந்த நிலையில்   மூன்று முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். 
தந்தையின் செயல்களுக்கு தமையனே இப்படி அனுபவிக்கிறார் என்றால் ஜாதகரின் தந்தையின் நிலை என்னவாகி இருக்கும்.
இவற்றிற்கு காரணமான ஜாதகரின் தந்தையையார் அவரது ஒழுக்கக்கேடான வாழ்வினால்  எய்ட்ஸ் வியாதியில் நிராதரவான நிலையில் இறந்து போனார்.
பெண்மைக்கு தீங்கு விளைவித்தால் அது காரணமானவர்களை மட்டுமல்ல அவரது வம்சத்தையே கடுமையாக பாதிக்கிறது.
பெண் பாவம் பொல்லாதது என்பது அறிவுரை மட்டுமல்ல அது அனுபவமொழி.
மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்,
வாழ்த்துக்களுடன், அன்பன்,
பழனியப்பன்,கைப்பேசி எண்: 7871244501 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

தேடல்கள்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை

மேலும் படிக்க »
கல்வி

Risk Assessment

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக

மேலும் படிக்க »
Tarot

That’s All Your Honour!

ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்

மேலும் படிக்க »
கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil