மருந்து வில்லை உறக்கம்!

கடக லக்னத்திற்கு 1௦ ல் சந்திரன் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கிறார். கேதுவிற்கும் சந்திரனுக்கும் இடையே கிரகங்கள் எதுவுமில்லை. கேது தந்தையை குறிக்கும் சூரியனின் உத்திரம்-4 ல் நின்று தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதி குருவோடு இணைந்துள்ளார். சூரியன் லக்னத்திற்கு 8 ல் மறைந்துள்ளார். இதனால்  ஜாதகியின் தந்தை முதலில் மரணமடைந்தார். லக்னத்திற்கு 5 ல் செவ்வாய் இருப்பதால் தந்தையின் காலத்திற்கு பிறகே ஜாதகியின் வாழ்வு சிறப்படைய வேண்டும் என்பது விதி. கேது 9 ஆமதிபதி குருவை பாதித்த பிறகு பிறகு லக்னத்தையும் சந்திரனையும் தொடுகிறது. இதனால் ஜாதகியின் தாயும் லக்னாதிபதி என்ற அடிப்படையில் ஜாதகியும் அடுத்து கேதுவால் பாதிக்கபடுவார்கள் எனலாம்.

ஜாதகிக்கு திருமணமாகிவிட்டது. ஜாதகிக்கு தற்போது ராகு திசை நடக்கிறது. லக்னாதிபதி சந்திரன் கேது சாரம் பெற்றதால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் ராசியதிபதி செவ்வாய் தனது மற்றொரு வீடான விருட்சிகத்தில் ஆட்சி பெற்றுள்ளார். இதனால் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியின் வலுவே மேலோங்கி நிற்கிறது. எனவே இந்த ஜாதகத்திற்கு பலன் கூறுகையில்  ராசியை முன்னிறுத்தி பலன் கூறுவதே சிறப்பு.  ராகு, கால புருஷனுக்கு 12 ல் ராசிக்கு 12 ல் இருந்து திசை நடத்துகிறார். 12 ஆமிடம் என்பது படுக்கை, தாம்பத்யம், தூக்கம் போன்றவற்றை குறிக்கக்கூடியது. தாயை தனித்து விட்டுவிட்டு மணமாகி வந்த ஜாதகியால் தாயின் தனிமையை நினைத்து கணவரோடு நல்ல தாம்பத்யத்தை அனுபவிக்க இயலவில்லை. உடல் ரீதியாக மன ரீதியாக ஒருவர் சுகமடைய வேண்டுமெனில் ஜாதகத்தில் உடல் & மன காரகன் சந்திரன் சந்நியாசி காரகன் கேதுவின் சாரம் பெறக்கூடாது என்பது விதி. சன்யாச தர்மத்தை ஏற்றுக்கொண்டோருக்கு வேண்டுமானால் அது நன்மை செய்யலாம். குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கு நன்மை செய்யும் அமைப்பல்ல. 

கூடுதலாக   இந்த ஜாதகத்தில் ராகு-கேதுவின் அட்சின் வெளியே சந்திரன் மட்டும் தனியாக நிற்கிறது. ராகு-கேதுவின் அச்சுக்கு வெளியே இப்படி ஒரு கிரகம் தனித்து நின்றால் அந்த கிரகம் குறிக்கும் உறவுடன் ஜாதகர் ஒன்றிவிட இயலாத சூழல் ஏற்படும். ஜாதகியின் தாயும் மகளுடன் வந்து தங்குவது உசிதமல்ல என்ற நிலையில் தனிமையில் தனது முதுமையை கழிக்கிறார். மேலும் கேது என்பது வயதான விதவையை குறிக்கும் கிரகமாகும். இதனால் விதவையான ஜாதகியின் தாயார் தனது முதுமைக்காலத்தில் கேது குறிப்பிடும் தனிமையில் வாட நேரிடும். தாயை ஏற்றுக்கொள்ள ஜாதகி முனையும் சூழலில் தாய் அதை நிராகரிக்கிறார். தனது தாயின் இந்த நிலையால் ஏற்பட்ட மன உழைச்சலால் ஜாதகி உறக்கமின்றி தவிக்கிறார். இதனால் ஜாதகி உறக்கத்திற்காக மருந்து வில்லைகளை உட்கொள்கிறார். இத்தகையோருக்கு வழிகாட்ட முயலும்போதுதான் ஒரு ஜோதிடராக நான் திகைத்துப்போகிறேன். 

கேது – மருந்து.

உட்கொள்ளல் – சந்திரன்.

நிம்மதியான உறக்கம் – கேது. 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

தேடல்கள்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை

மேலும் படிக்க »
கல்வி

Risk Assessment

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக

மேலும் படிக்க »
Tarot

That’s All Your Honour!

ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்

மேலும் படிக்க »
கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil