அவன்

அவன் ஒரு சிறுவன்

அவனது கை நிறைய பொம்மைகள்

ஒன்றின் தலையை பரிவுடன் கோதிவிடுகிறான்

ஒன்றை முத்தமிடுகிறான்

ஒன்றின் கையை பிடித்துத் திருகுகிறான்

ஒன்றின் காலை ஒடிக்கிறான்.


அவன் ஒரு அன்னை

தன் குழந்தையின் அழுகைக்கு ஓடி வந்து அணைத்துக்கொள்கிறான்

குழந்தையின் சிரமங்களை பாசத்துடன் சரி செய்கிறான்

தலை வாரி ஆடையுடுத்தி அலங்காரம் செய்கிறான்நல்லிசை இசைக்கிறான் 

 நல்ல பாடங்களை சொல்லித்தருகிறான்


அவன் ஒரு பைத்தியக்காரன்

ரோட்டில் வருவோர் போவோரையெல்லாம் தாக்குகிறான்

கண்டதையும் வீசி எறிகிறான்

சகல பாஷையில் திட்டுகிறான்

உணவு கேட்டு கை நீட்டுகிறான்

பெற்றதை ஆர்வத்துடன் உண்ணுகிறான்


அவன் ஒரு வழிகாட்டி

உண்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகிறான்

நேரிய பாதையில் நடக்கக் கோருகிறான்

பாதையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறான்

பயணத்தில் எதிர்படும் அற்புதங்களை கவனிக்கச் சொல்லுகிறான்

சுகமான பயணத்துக்கு துணை நிற்கிறான்


யாரிவன்?

அவனது பெற்றோர்கள் யார்?

அவன் எந்த ஊரைச் சார்ந்தவன்?

ஏனிப்படி நடந்து கொள்கிறான்அதனால் அவனுக்கு என்ன பலன்?

அவன் பெயர் என்ன?


அவன் ஓர் அனாதை

அவனுக்கு பெற்றோர்கள் இல்லை

ஆகவே அவன் ஓர் பரதேசி

அவனுக்கு பிடித்த செயல்களை அவன் செய்கிறான்

அதனால் நம் கர்மங்களை அவன் கழிக்கிறான்

அவன் பெயர் இறைவன்!

ஆக்கம்பழனியப்பன்
பிற்சேர்க்கை:
நாலாயிரத்தில் மூழ்கிநம்மாழ்வாரில் பிரம்மித்தபோதுநான் எழுதிய கவிதை இது 
பிறிதொரு நாளில் புத்தகமாகலாம்பிடித்திருந்தால்பின்னூட்டம் இடுங்கள்!

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மணந்தால் மகாதேவி!

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக, தான் படித்த படிப்பிற்கு ஏற்ற, அந்தஸ்துள்ள ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் பலர் மிக உறுதியாக இருக்கிறார்கள். “தகுதியான வேலை கிடைக்கும் வரை

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil