கடவுளின் குழந்தைகள்

குழந்தைகளின் உலகம் மகத்தானது. நாம் எல்லோரும் கவலைகளற்ற அந்த  பருவத்தை கடந்து வந்திருந்தாலும் இன்னும் மனதில் ஏக்கத்தோடு பார்க்கும் பருவம் குழந்தைப்பருவம்.  குழந்தைப்பருவத்தின் பல்வேறு நிலைகளை ஜாதக ரீதியாக இந்தப்பதிவில் அலசுவோம்.


மனிதனின் முதல் பத்து வயது வரை ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சந்திரன் ஆகும். இப்பருவத்தில் குழந்தைகளின் செயல்பாடு சந்திரனைப்பொருத்தே அமையும்.

கீழே ஒரு பெண் குழந்தையின் ஜாதகம்.

இந்தக்குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் உச்ச வர்கோத்தமம் பெற்றுள்ளது. சந்திர திசை 7 வயதில் முடியும். அதன் பிறகு செவ்வாய் திசையின் முதல் பகுதி அதாவது 1௦ வயது வரை மிகுந்த துடிப்பான செயல்பாட்டைக்கொண்டிருக்கும்.

இச்சிறுமியின் தற்போதைய நிலையானது மிகுந்த செயல்வேகம். அதீத கிரகிப்புத்திறன் ஆகியவற்றோடு  சந்திரன் வயதான பெண்ணை குறிக்கும் கிரகம் என்பதன் காரணமாக வயதுக்கு மீறிய பேச்சு  சாதுர்யத்தைக்கொண்டுள்ளது.

குழந்தை மேதாவித்தன்மை எனப்படும் CHILD PRODIGY  வகையை சார்ந்தது இந்த பெண் குழந்தையின் செயல்பாடு.

கீழே இரண்டாவதாக ஒரு சிறுவனின் ஜாதகம்.

சந்திரன் இங்கு ஆட்சியில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது. உடன் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாயை நீசபங்கப்படுத்துகிறது. சதுர்த்த கேந்திரம் என்பது சந்திரனுக்கு திக்பலத்தையும் தருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய ஜாதக நிலைமையானது அதீத முரட்டு சுபாவம் கொண்ட விளையாட்டுத்தனைத்தை ஏற்படுத்தும். பாதகாதிபதியும் மெதுவான செயல்பாட்டுக்குறியவருமான சனியின் திசை நடந்தாலும் கூட சனி 6 ஆமிடத்தில் அமைந்து திசை நடத்துவதால் சிறுவனின் மேற்சொன்ன சுபாவத்தில் அது பாதிப்பை ஏற்ப்படுத்த இயலவில்லை. மாறாக கல்வியில் மட்டுமே அது மந்த நிலைமையை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தீவிர செயல்பாட்ட குறிக்கும் நிலைமை. மருத்துவத்தில் HYPER ACTIVE  என அழைக்கப்படுகிறது.

மூன்றாவதாக மற்றொரு சிறுவனின் ஜாதகம் கீழே.

இச்சிறுவனின் ஜாதகத்தில் சதுர்த்த கேந்திரத்தில் தடை மற்றும் மந்தத்தன்மையை குறிக்கும் கேது அமர்ந்து குழந்தைப் பருவத்தை குறிக்கும் சந்திரனை பார்க்கிறார். சந்திரனுக்கு இடம் கொடுத்த 2 ஆமதிபதி சுக்கிரன் உச்சமானாலும் சுக்கிரனுக்கு பாவகர்த்தாரி யோகம் ஏற்பட்டு சுக்கிர மற்றும் சந்திர கேந்திரங்களில் பாவிகள் நின்றதால் சிறுவனுக்கு செயல்பாட்டில் மந்தத்தன்மையை தருவதுடன் பேச்சுத்திறனிலும் தடையை ஏற்படுத்துகிறது. இதுவரை சிறுவனுக்கு சரியாக பேச இயலாத நிலையே தொடர்கிறது. இதற்கு 2 ஆமிடம் தொடர்புடையவற்றோடு வாக்கு காரகனும் லக்னாதிபதியுமான புதனுக்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பதையும் கவனிக்கவேண்டும். நடப்பில் இருக்கும் ராகு திசை சிறுவனுக்கு பொருட்காரணிகளில் தடையை ஏற்படுத்தாவிட்டாலும் உயிர்க்காரணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என்பது கவனிக்கத்தக்கது.

மன இறுக்கம் என்றழைக்கப்படும் இத்தகைய நிலையை இன்றைய மருத்துவ உலகம் AUTISM  என குறிப்பிடுகிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,

பழனியப்பன்,

கைப்பேசி எண்: 07871244501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?”

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil