மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு ஆணின் ஜாதகத்தில் பத்தாம் இடம் எனப்படும் கர்ம ஸ்தானம் தற்காலிகமாகப் பலவீனம் அடையும்போதோ அல்லது ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற காலக்கட்டங்களிலோ அவனது உழைப்பிற்கும் வருமானத்திற்கும் முட்டுக்கட்டைகள் ஏற்படுவதுண்டு.

ஒரு குடும்பத்தின் ஆணிவேராகக் கருதப்படும் கணவன், தனது பணியை இழந்து தவிக்கும் தருணம், பொருளாதார வீழ்ச்சியை விடவும் மனரீதியான சோர்வையே அதிகம் தருகிறது. “யார் அந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களோ, அவரே உண்மையான வாழ்க்கைத்துணை” என்கிறது சாஸ்திரம்.

ஜோதிட ரீதியாகப் பார்த்தால், கணவனின் ஜாதகத்தில் கிரகங்கள் சோதிக்கும் வேளையில், மனைவியின் ஜாதகத்தில் உள்ள சுபத்துவமான கிரக நிலைகள் (குறிப்பாக வலுவான சந்திரன் மற்றும் செவ்வாய்) அந்தப் பேரிடரைத் தாங்கும் சக்தியைத் தருகின்றன. “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்பதைத் தாண்டி, “கணவன் தடுமாறும்போது அவனது கரம் பிடித்து, ‘நான் இருக்கிறேன்’ என்று பணிக்குச் சென்று குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண், அந்த வீட்டின் மகாலக்ஷ்மியாகவே மாறுகிறாள்.”

காலச்சக்கரம் சுழலும்போது, கணவனின் கர்ம வினைகளைத் தன் அன்பாலும் உழைப்பாலும் சரிசெய்யும் ஒரு மனைவியின் பங்களிப்பு வெறும் பொருளாதார உதவி மட்டுமல்ல; அது அந்த இல்லறத்தின் அஸ்திவாரத்தைச் சிதையாமல் காக்கும் ஒரு புனிதமான அறம்.

இந்தப் பதிவில், கணவனுக்குப் பணியிழப்பு ஏற்படும் காலங்களில் கிரகங்களின் தாக்கம் எப்படி இருக்கும்? அப்படியொரு சூழலில் மனைவி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காக்கும் உன்னதமான நிலை யாருக்கு அமையும்? இது போன்ற சூழல்களைக் கடக்க ஜோதிடம் காட்டும் வழிமுறைகள் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

இது ஒரு மீன லக்ன ஜாதகம். அத்துடன் 1-7 ஆகிய இடங்களில் ராகு-கேதுக்கள் இருப்பதால் இது சர்ப்ப தோஷ ஜாதகம் என்பதும் உறுதி.

  1. லக்னாதிபதி நிலை: லக்னாதிபதி குரு பகவான் விரைய ஸ்தானமான 12-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்று மறைந்துள்ளார். பொதுவாகச் சுப கிரகமான குரு மறைவதை விட, லக்னாதிபதி மறைவது ஜாதகருக்கு அதிகப் பாதிப்பைத் தரும்.
  2. பரிவர்த்தனை யோகம்: 2-ஆம் அதிபதி செவ்வாய் 11-ல் உச்சம் பெற்றுள்ளார். விருச்சிகத்தில் உள்ள சனியோடு செவ்வாய் பரிவர்த்தனை பெறுவது சிறப்பு.
  3. தொழில் நுட்ப அறிவு: 1 மற்றும் 7-ஆம் இடங்களில் சர்ப்ப கிரகங்கள் (ராகு-கேது) அமைந்துள்ளதால், தம்பதியர் இருவருமே தொழில்நுட்ப அறிவு (Technical Knowledge) உடையவர்களாக இருப்பார்கள்.
  4. இடமாற்றம்: இந்த ஜாதகத்தில் பரிவர்த்தனையின் பங்கு முக்கியமானது. ஜாதகர் 9-ஆம் இடம் குறிப்பிடும் தொலைதூர ஊருக்கு (அல்லது வெளி மாநிலத்திற்கு) வேலை நிமித்தமாகச் செல்லும்போது, சனி தொடர்பாவதால் இருப்பிடத்தை விட்டு வேலைக்காக விலகிச் செல்ல நேரிடும். லக்னாதிபதி பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக தொலைதூர வாழிடங்களில் சிறப்படைகிறார்கள்.
  5. பணி பாதிப்பு: 12-ல் மறைந்த குரு வக்கிரமாகி 4, 6, 8 ஆகிய பாவகங்களைப் பார்ப்பதால் சொத்து (4), வேலை (6), மற்றும் அவமானம் (8) ஆகிய ரீதியில் பாதிப்புகளைத் தருகிறார். குறிப்பாக, வேலையைக் குறிக்கும் 6-ஆம் அதிபதி சூரியன், அவமான ஸ்தானமான 8-ல் நீசம் பெற்று மறைந்துள்ளார். சூரியன் கௌரவ காரகர் என்பதால், வேலையில் ஏற்படும் பாதிப்புகளால் ஜாதகர் மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளாவார். சூரியனுடன் இணைந்த சுக்கிரன் வக்கிரமாகியுள்ளதால், இங்குச் சூரியனுக்கு நீச பங்கமும் கிடைக்கவில்லை.

தசாம்ச வர்க்கம் (D10) ஆய்வு:

ஜீவனத்தை ஆராய வேண்டிய தசாம்சத்தில் தனுசு லக்னம் பாவ கர்தாரி அமைப்பில் (இரு பாப கிரகங்களுக்கு இடையில்) சிக்கியுள்ளது. இது வேலை வாய்ப்புகளில் தொடர் பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தெளிவாக்குகிறது.

  • 2-ஆம் இடத்தில் கேது அமைந்தது வருமானத் தடையைக் குறிப்பிடுகிறது.
  • 2-ஆம் அதிபதி சனி நீசம் பெற்ற 8-ஆம் அதிபதி சந்திரனுடன் 12-ல் மறைந்தது, வேலைவாய்ப்பில் ஜாதகர் கடும் போராட்டங்களைச் சந்திப்பார் என்பதைக் காட்டுகிறது.
  • வேலை பாவகமான 6-ஆம் இடமான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும், அவர் வக்கிரமானது வேலை வாய்ப்பில் முட்டுக்கட்டைகளை உருவாக்குகிறது.

நடப்பு நிலை: இத்தகைய அமைப்பால் ஜாதகர் வேலைவாய்ப்பில் நிம்மதியற்ற நிலையிலேயே உள்ளார். ஒரு வருடம் வேலை பார்த்தால், அடுத்த இரண்டு ஆண்டுகள் வேலை இல்லாத நிலை இவருக்கு ஏற்படுகிறது. சொந்த மாநிலமான தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நிலையில், பொருளாதாரத்திற்காகப் போராடும் ஒரு குடும்பஸ்தனின் நிலை கடினமானது.

மனைவி மூலம் யோகம் உண்டா?

ராசிச் சக்கரப்படி மீன லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி புதன் ‘பாதகாதிபதி’ ஆகிறார். களத்திர காரகர் சுக்கிரன் 8-ஆம் அதிபதி ஆகிறார். இந்நிலையில் மனைவியால் வருமானம் வருமா?

  • அதிர்ஷ்டவசமாக சுக்கிரன் 8-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றுள்ளதால், அவர் இயல்புக்கு மாறான அதாவது தீய பலன்களைச் செய்யாமல் நற்பலன்களைச் செய்வேண்டிய நிலையில் உள்ளார்.
  • 7-ஆம் அதிபதி புதன், 9-ஆம் இடமான விருட்சிகத்தில் சனி தொடர்பு பெறுகிறார். சனியுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு 2, 9 அதிபதியான செவ்வாயுடன் தொடர்பு பெறுவதால், மனைவி பணிக்குச் செல்வதற்கும், மனைவியால் குடும்பத்திற்கு லாப வரவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மனைவியின் உதவிகளை மேலும் தெளிவாக நவாம்சம் மூலம் ஆராய்வோம்.

நவாம்சத்தில் சிம்ம லக்னாதிபதியும் கௌரவ காரகருமான சூரியன், மனைவியைக் குறிப்பிடும் 7-ஆம் இடத்தில் ராகுவுடன் இணைந்துள்ளார். ஜாதகர் கௌரவம் பார்க்காமல் மனைவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தால் (சரணடைந்தால்) மனைவி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்பது தெளிவாகிறது.

7-ஆம் அதிபதி சனி, தனது 10-ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதாலும், லக்னாதிபதி சூரியனுக்கு 10-ல் நிற்பதாலும், ஜாதகர் தனது மனைவியைக் கேட்டுக்கொண்டால் அவர் நிச்சயம் பணிக்குச் சென்று குடும்ப பாரத்தைத் தாங்குவார்.

முடிவுரை:

கணவன்-மனைவி இருவருமே மென்பொருள் துறையில் வல்லுநர்கள் என்றாலும், கணவரின் ஜாதக அமைப்பு அவரைச் சம்பாதிக்க விடுவதில்லை. ஆனால், அந்த இடத்தைத் தனது உழைப்பால் நிரப்பும் மனைவி தான் வேலைக்குச் சென்று  கணவரையும் இரு குழந்தைகளையும் காக்கிறார். ஒரு ஆண் வாழ்வில் சோர்வடையும் போது அவனைத் தாங்கிப் பிடிக்கும் இத்தகைய பெண்கள் இறைவனால் ஆணுக்கு வழங்கப்பட்ட வரம்.

அனைத்து ஆண்களுக்கும் இத்தகைய மஹாலக்ஷ்மிகள் அமைவதில்லை. அமைந்தாலும் அவர்களைப் போற்றும் பக்குவம் அனைவருக்கும் இருப்பதில்லை. இல்லறம் சிறக்கப் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவதே சிறந்த ஜோதிடப் பரிகாரம்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மணந்தால் மகாதேவி!

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக, தான் படித்த படிப்பிற்கு ஏற்ற, அந்தஸ்துள்ள ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் பலர் மிக உறுதியாக இருக்கிறார்கள். “தகுதியான வேலை கிடைக்கும் வரை

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English