கடவுளின் குழந்தைகள்

குழந்தைகளின் உலகம் மகத்தானது. நாம் எல்லோரும் கவலைகளற்ற அந்த  பருவத்தை கடந்து வந்திருந்தாலும் இன்னும் மனதில் ஏக்கத்தோடு பார்க்கும் பருவம் குழந்தைப்பருவம்.  குழந்தைப்பருவத்தின் பல்வேறு நிலைகளை ஜாதக ரீதியாக இந்தப்பதிவில் அலசுவோம்.


மனிதனின் முதல் பத்து வயது வரை ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சந்திரன் ஆகும். இப்பருவத்தில் குழந்தைகளின் செயல்பாடு சந்திரனைப்பொருத்தே அமையும்.

கீழே ஒரு பெண் குழந்தையின் ஜாதகம்.

இந்தக்குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் உச்ச வர்கோத்தமம் பெற்றுள்ளது. சந்திர திசை 7 வயதில் முடியும். அதன் பிறகு செவ்வாய் திசையின் முதல் பகுதி அதாவது 1௦ வயது வரை மிகுந்த துடிப்பான செயல்பாட்டைக்கொண்டிருக்கும்.

இச்சிறுமியின் தற்போதைய நிலையானது மிகுந்த செயல்வேகம். அதீத கிரகிப்புத்திறன் ஆகியவற்றோடு  சந்திரன் வயதான பெண்ணை குறிக்கும் கிரகம் என்பதன் காரணமாக வயதுக்கு மீறிய பேச்சு  சாதுர்யத்தைக்கொண்டுள்ளது.

குழந்தை மேதாவித்தன்மை எனப்படும் CHILD PRODIGY  வகையை சார்ந்தது இந்த பெண் குழந்தையின் செயல்பாடு.

கீழே இரண்டாவதாக ஒரு சிறுவனின் ஜாதகம்.

சந்திரன் இங்கு ஆட்சியில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது. உடன் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாயை நீசபங்கப்படுத்துகிறது. சதுர்த்த கேந்திரம் என்பது சந்திரனுக்கு திக்பலத்தையும் தருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய ஜாதக நிலைமையானது அதீத முரட்டு சுபாவம் கொண்ட விளையாட்டுத்தனைத்தை ஏற்படுத்தும். பாதகாதிபதியும் மெதுவான செயல்பாட்டுக்குறியவருமான சனியின் திசை நடந்தாலும் கூட சனி 6 ஆமிடத்தில் அமைந்து திசை நடத்துவதால் சிறுவனின் மேற்சொன்ன சுபாவத்தில் அது பாதிப்பை ஏற்ப்படுத்த இயலவில்லை. மாறாக கல்வியில் மட்டுமே அது மந்த நிலைமையை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தீவிர செயல்பாட்ட குறிக்கும் நிலைமை. மருத்துவத்தில் HYPER ACTIVE  என அழைக்கப்படுகிறது.

மூன்றாவதாக மற்றொரு சிறுவனின் ஜாதகம் கீழே.

இச்சிறுவனின் ஜாதகத்தில் சதுர்த்த கேந்திரத்தில் தடை மற்றும் மந்தத்தன்மையை குறிக்கும் கேது அமர்ந்து குழந்தைப் பருவத்தை குறிக்கும் சந்திரனை பார்க்கிறார். சந்திரனுக்கு இடம் கொடுத்த 2 ஆமதிபதி சுக்கிரன் உச்சமானாலும் சுக்கிரனுக்கு பாவகர்த்தாரி யோகம் ஏற்பட்டு சுக்கிர மற்றும் சந்திர கேந்திரங்களில் பாவிகள் நின்றதால் சிறுவனுக்கு செயல்பாட்டில் மந்தத்தன்மையை தருவதுடன் பேச்சுத்திறனிலும் தடையை ஏற்படுத்துகிறது. இதுவரை சிறுவனுக்கு சரியாக பேச இயலாத நிலையே தொடர்கிறது. இதற்கு 2 ஆமிடம் தொடர்புடையவற்றோடு வாக்கு காரகனும் லக்னாதிபதியுமான புதனுக்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பதையும் கவனிக்கவேண்டும். நடப்பில் இருக்கும் ராகு திசை சிறுவனுக்கு பொருட்காரணிகளில் தடையை ஏற்படுத்தாவிட்டாலும் உயிர்க்காரணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என்பது கவனிக்கத்தக்கது.

மன இறுக்கம் என்றழைக்கப்படும் இத்தகைய நிலையை இன்றைய மருத்துவ உலகம் AUTISM  என குறிப்பிடுகிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,

பழனியப்பன்,

கைப்பேசி எண்: 07871244501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மணந்தால் மகாதேவி!

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக, தான் படித்த படிப்பிற்கு ஏற்ற, அந்தஸ்துள்ள ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் பலர் மிக உறுதியாக இருக்கிறார்கள். “தகுதியான வேலை கிடைக்கும் வரை

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

சுயதொழில் எனும் புதிய பயணம்: அடிமைத் தளையிலிருந்து ஆளுமைப் பாதைக்கு!

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது

Loading

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.” ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil