Run… Run….

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய  காலத்தில் ஓய்வெடுத்தால், ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் ஓட வேண்டியிருக்கும்” என்பர். ஆனால் இன்றைய உலக பொருளாதாரச் சூழல் நம் அனைவரையும் நிதானிக்க வைக்கிறது. எதிர்கால வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று அனுமானித்து அதன்படி இன்று நம்மை தகவமைத்துக்கொண்டால் மட்டுமே நாளைய உலகில் நமக்கான அங்கீகாரம் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும். விரைந்து மாறிவரும் தொழில் நுட்பங்கள் தற்போது அனைவர் மனதிலும் திகைப்பை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. கடந்த இரு தசாப்தங்களை போல இன்று கணினி தொடர்பான கல்வி பயின்று நாளைய தகவல் தொழில் நுட்ப உலகில் கோலோச்சலாம் என்ற கனவுடன் கல்லூரிகளில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களுக்கு தற்போதைய கணினி அறிவு நாளைய உலகிற்கு போதுமானதாக இராது என்பது கவலையளிக்கும் விஷயம். Ai மற்றும் Quantum தொழில் நுட்பங்கள்தான் நாளைய உலகை ஆளும் என்பது தற்போது பரபரப்பான பேச்சாக உள்ளது. இவ்விரு தொழில்நுட்பங்களில் முன்னணி பெறும் நாடுகள்தான் பிற நாடுகளை கட்டுப்படுத்தும் வல்லமை பெறும். “இன்றைய உலகில் அறிவே ஆயுதம்” எனும் நிலையில் நாம் உள்ளோம். அனைத்து தொலில் நுட்பத் துறைகளிலும் தங்களுடன் போட்டியிடும் இந்தியாவை மேற்கத்திய நாடுகள் போட்டியாளராகப் பார்க்காமல் பகைவராக பார்ப்பதை இன்று கண்கூடாகக் காண்கிறோம். இதனால் இப்போது நாம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், இந்தியா வல்லரசாவது என்பது கனவாகிவிடும். எனவே இன்று ஓடினால் அடுத்த ஓரிரு தசாப்தங்கள் நமக்கானதாக மாறும். ஆனால் நமக்கு நீடித்த வளர்ச்சி வேண்டுமாயின் நாம் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாய விதி.  

இந்நிலையில் தனது தொழிலில் சோர்வுற்ற ஒருவர், என்னதான் நடக்கிறது தனது தொழிலில் என்று என்னை அனுகியதன் பேரில் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

துலாம் உதயத்தில் குரு நின்று 7 ல் வெளிவட்டத்தில் நிற்கும் 1௦ ஆமதிபதி சந்திரனை நேர் பார்வை பார்க்கிறார். இரண்டுமே நீர் கிரகங்கள். சந்திரன் நீர் என்றால், குரு கடல். உதயத்தில் குரு திக்பலம் பெற்று நிற்க, தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடம் கடகத்தில் ஜாம (வெளிவட்ட) உதயாதிபதி சுக்கிரனுடன் திக்பல சூரியனுடனும், 9, 12 ஆமதிபதி புதனுடனும் இணைந்து  நிற்பதிலிருந்து கேள்வியாளர் சுயமாக தொழில் செய்பவர். அது கடல் சார் தொடர்புடைய வர்த்தக தொடர்பாளராக இருக்க வேண்டும் என்று அறியலாம். புதன் தொடர்பாளரை குறிக்கும்.

உதயத்தில் நிற்கும் குருவே ஆரூடம் அமைந்த 9 ஆமிடமான மிதுனத்தில்  உள்வட்ட உதயாதிபதி சுக்கிரன், சனி ஆகியோருடன் நிற்பதிலிருந்து, கேள்வியாளர் வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர் என்பதை உறுதியாகக் கூறலாம். 9 ஆமிட ஆரூடம் ராகு சாரத்தில் அமைந்ததால் தொழிலுக்காக கேள்வியாளர் ராகு குறிப்பிடும் நீண்ட பயணங்கள் செய்பவராக இருப்பார். உதயத்தை 7 ஆமிடத்திலிருந்து பயண காரகர் சந்திரன் பார்ப்பதும் இதையே குறிப்பிட்டுகிறது.

வாடிக்கையாளரை குறிப்பிடும் 7 ஆமதிபதி செவ்வாய் 12 ஆமிடத்தில் உச்ச புதனுடன் இணைந்துள்ளார் என்பதால் வாடிக்கையாளர்களை காண கேள்வியாளர் அலைச்சல் மிக்க பயணங்கள் செய்பவராக இருப்பார். ஜாமக்கோளில் 12 ஆமிடம் தொடர்புடைய விஷயங்களில் சில சமயம் தவிர்ப்பது நலம் என்று கூறப்படும் வேளையில், வாடிக்கையாளரை குறிப்பிடும் கிரகம் 12 ல் நிற்பதால், அலைச்சல் இருந்தாலும் வாடிக்கையாளர்களை காண கேள்வியாளர் பயணித்துத்தான் ஆக வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.

கவிப்பு லாப ஸ்தானமாக 11 ல் நிற்பது நன்மையே என்றாலும் அவர் உதயாதிபதி சுக்கிரனின் பூரத்தில் நிற்பதால் தனக்கு லாபம் வேண்டுமெனில் கேள்வியாளர் சிரமங்களை பார்க்காமல் தனது கடமையை செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.

மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்துவிட்டு கேள்வியாளரிடம் உங்களது தொழிலில் அலைச்சல்கள் அதிகமிருக்கும். தற்போது இந்த அலைச்சல்கள் அல்லது பயணங்களால் அதிக பயனிருக்காது. ஆனால் நீடித்த வாடிக்கையாளர் தொடர்பை தக்கவைத்துக்கொள்ள இந்த பயணங்கள் நிச்சயம் தேவை. உதயத்திலும், பத்தாமிடத்திலும் திக்பல கிரகங்கள் இருப்பதால் உங்களது தொழில் சிறப்பானதே. தொழிலில் இவ்வித அலைச்சல்கள் தற்காலிகமானவைகளே. நீங்கள் கடல் பயணங்கள், கப்பல் சார்ந்த ஏற்றுமதி தொழில்  தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு வாடிக்கையாளர் “நான் கப்பலில் சரக்கு ஏற்றுமதி தொடர்புடைய Lojistic நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறேன். அதன் பொருட்டு வாடிக்கையாளர்களை காண பயணங்கள் அதிகம். ஆனால் அதற்கேற்ற பலன்கள் குறைவு என்பதுதான் எனது ஆதங்கம். அதன்பொருட்டுத்தான் உங்கள் ஆலோசனையை நாடினேன்” என்றார். பிரசன்னம் வந்தவர் சூழலை துல்லியமாகக் காட்டியது. தற்போது உள்வட்டத்தில் மிதுனத்தில் நிற்கும் உதயாதிபதி சுக்கிரன் உதயத்தை தொடக்கூடிய அடுத்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதுவரை சோர்வடையாமல் தொழிலில் உங்கள் முயற்சியை தொடருங்கள் என்று கூறினேன்.

மீண்டும் உங்களை மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?”

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil