நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது கல்லறைத் திருவிழா.  உண்மையில் உருவ வழிபாடு என்பது இறந்த நம் முன்னோர்களின் பெயரால் நடு கற்கள், மரங்கள் நடுதல், அடையாளச் சின்னங்கள் இவற்றை வைத்து மனித இனம் தாங்கள் ஜீவித்திருக்க காரணமான தனது மூதாதையர்களுக்கு நன்றி கூறியவற்றை வைத்து உருவானதே. தமிழர் மரபில் இந்துக்களாகிய நமக்கு புரட்டாசி புனித மாதமாக கூறப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் பித்ரு காரகர் எனப்படும் தந்தையை குறிக்கும் சூரியனும், மாத்ரு காரகர் எனப்படும் தாயை குறிக்கும் சந்திரனும் அமாவாசையன்று இணைகிறார்கள். இவர்கள் இணையும் ராசி தகவல் தொடர்பின் காரகரும், இளவரசரை குறிக்கும் கிரகமுமான புதனின் மூலத் திரிகோண வீடாகிய கன்னி ராசியில் என்பதால் மறைந்த தந்தை, தாய் வழி முன்னோர்களை ஒரு தமையன் நன்றியோடு நினைவு கூர்ந்து வழிபாடு செய்வது மரபாகிறது. புத்தி காரகர் புதனின் கன்னி ராசியில்தான் அனைத்து கிரகங்களும் தங்கள் புத்தியை தெளிவுபடுத்திக் கொள்கின்றன. மனதில் தெளிவு இல்லாமையே அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். இதனால் கன்னி ராசியில் நிற்கும் கிரகங்கள் சாதுர்யம் மிக்கவையாகச் செயல்படும். இளவரசனை குறிக்கும் புதனின் கன்னி ராசியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தெய்வங்களாக நாம் வழிபடும் முன்னோர்கள் கூட்டாக இறங்கி பூமிக்கு வந்து தங்கள் சந்ததிகளை கண்டு அவர்களது நன்றிக் கடனை ஏற்று அவர்களை ஆசீர்வதிக்கும் நாளாக மஹாளய அமாவாசை இந்துக்கள் மரபில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஆமாவாசைக்கு முன்னதான 15 நாட்கள் மஹாளய  பக்ஷம் என்று அழைக்கப்படுகிறது. இதில் மஹாளயம் என்பது  நாம் வழிபடும் முன்னோர்களின் ஆன்மாக்கள் கூட்டாக நம்மை நோக்கி வருவதை குறிப்பிடுகிறது. பக்ஷம் என்பது 15 நாட்களுடைய சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை காலங்களை குறிப்பிடும் கால அளவாகும். பிற மதங்களிலும் இத்தகைய முன்னோர்களுக்கு நன்றி கூறும் நாட்கள் கொண்டாடப்படுகிறது என்றாலும் நமது இந்து மரபில் மேற்கூறப்பட்ட ஜோதிட ரீதியான அடிப்படைகள் பிற மதங்களில் இல்லை என்பது நமது மதத்தின்  சிறப்பாகும்.   

இந்நிலையில் வாரிசற்று இறந்துவிட்ட தனது சித்தப்பா தன்னிடம் கனவில் வந்து உணவு கேட்பதாக ஒரு பெண்மணி நம்மை தொடர்புகொண்டார். பெற்றோர்களுக்கு நீத்தார் கடமையாற்றும் நாம், ஒன்றுவிட்ட உறவுகளுக்கு உணவுப்பிண்டமளித்து நீத்தார் கடன் ஆற்றலாமா?. அதிலும் பெண்ணாகிய தான் செய்வது சரியா? என்று கேட்ட பெண்மணிக்கு நாம் ஜாமக்கோள் பிரசன்ன ரீதியாக ஆராய்ந்து கூறப்பட்ட விளக்கங்களே இன்றைய பதிவாக வருகிறது.

எந்த ஒரு பிரசன்னத்திலும் கேள்வி சரியாக சுட்டிக் காட்டப்பட்டுவிட்டால் பதில் துல்லியமாக கிடைத்துவிடும். கர்ம காரியம் பற்றிய கேள்விகளுக்கு கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரமே உதயமாக அமைந்தது கேள்வியின் துல்லியத்தை குறிப்பிடுகிறது. உதயாதிபதியும், சித்தப்பாவை குறிப்பிடும் கிரகமுமான  சனி உதயத்திற்கு மூன்றாமிடத்தில் கால புருஷனின் மோட்ச ராசியான மீனத்தில் கவிப்புடன் இருப்பது கேள்வியாளரின் சித்தப்பாவின் ஆன்மா  மோட்சமின்றி தவிப்பதை குறிப்பிடுகிறது. உதயத்தில் பித்ரு காரகர் சூரியனே உதயத்தில் சந்திரனின் திருவோணத்தில் அமைந்ததை கவனிக்க. கேள்வியாளரின் தந்தையே தனது தம்பிக்காக கர்ம காரியங்களை செய்துள்ளார். சூரியனே கனவுகளுக்கும் காரக கிரகமாவதாலும், அவர் உணவு காரகர் சந்திரனின் சாரத்தில் அமைந்து, மீனத்திலமைந்த உள்வட்ட சனியை கன்னியிலமைந்த சந்திரன் பார்ப்பதிலிருந்து சித்தப்பா கேள்வியாளர் கனவில் வந்து உணவு கேட்பது தெளிவாகிறது.

உணவை குறிக்கும் 2 ஆமிடத்தில் ஆரூடம் அமைந்தது உணவு பற்றிய விஷயத்தை குறிப்பிடுகிறது. உதயாதிபதி சனி கும்ப ராகுவை கடந்து மீனத்தில் நிற்கிறார். கர்ம ஸ்தானமான உதயத்தின் 10 ஆமிடம் துலாத்தில் நிற்கும் மாந்தியும், மீனத்திலமைந்த உதயாதிபதி சனியும் ஒரே பாகையில் (7 பாகையில்) நிற்கிறார்கள் என்பதிலிருந்து கேள்வியாளரின் சித்தப்பா மரணமடைந்துள்ளது தெரிகிறது.

மூன்றாமிடத்தில் கவிப்புடன் உதயாதிபதி சனி மோட்ச ராசியான மீனத்தில் வெளிவட்ட பாம்புடன் நிற்பதிலிருந்து மோட்சமின்றித் தவிக்கும் சித்தப்பாவின் ஆன்மா  கனவின் மூலம் கேள்வியாளரை தொடர்புகொண்டு உணவு கேட்பது புரிகிறது.

இனி பதிலுக்கு வருவோம். நமது இந்துப் பாரம்பரியத்தில் இறந்து அமைதியடையாத ஆன்மாக்களை உறவானாலும், உறவில்லாவிட்டாலும் அவர்களை சாந்தப்படுத்த விதிகள் கூறப்பட்டுள்ளன. மஹாளய அமாவாசையன்று உறவுகளுக்கு சாந்தி வழிபாடுகள் கூறப்பட்டுள்ளன. உறவு இல்லாதவர்களுக்கு, ஒன்றுவிட்ட உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, ஏன் மனிதர்களாக அன்றி நம் வாழ்வோடு இணைந்து பயணித்த வளர்ப்புப் பிராணிகள், பறவைகள் ஆகியவற்றிக்குக் கூட சாந்தி வழிபாடுகள் கூறப்பட்டுள்ளன. உறவற்றவர்களுக்கும், துர்மரணம் அடைந்தவர்களுக்கும் இந்த மஹாளய பக்ஷத்தில் குறிப்பிட்ட நாட்களில் உணவளித்து சாந்திப்படுத்தும்  முறைகள் நமது இந்து தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே கேள்வியாளர் தனது சித்தப்பாவிற்காக மஹாளயத்தில் வழிபாடு செய்யலாம். இதில் ஆண், பெண் வாரிசுகள் செய்வது என்பது பிற்காலத்தில் சமுதாயம் ஒழுங்கமைந்த காலத்தில் வரையறுக்கப்பட்டதே. முதன்மை சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை என்பதால் கேள்வியாளர் பெண்ணாகிலும் தனது சித்தப்பாவிற்கு நீத்தார் கடமையாற்றலாம் என்று கூறினேன்.    

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மணந்தால் மகாதேவி!

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக, தான் படித்த படிப்பிற்கு ஏற்ற, அந்தஸ்துள்ள ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் பலர் மிக உறுதியாக இருக்கிறார்கள். “தகுதியான வேலை கிடைக்கும் வரை

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil