Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக தகவல் தொடர்புத்துறை ஏற்படுத்தித் தந்த வாய்ப்புகளால் மனித வாழ்வு பெருமளவு மாறிவிட்டது. கணினி, கைபேசி, மென்பொருள் போன்ற துறைகள் இவற்றிற்கு முன் கோலோச்சிய உற்பத்தி, விவசாயம், ஆகிய பாரம்பரிய துறைகளை பின்னுக்குத்தள்ளி எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும் வழங்கின. இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது Micro Electronics Chips எனப்படும் நுண்மின்னனுச் சில்லுகளாகும். இன்று கணினிகள், கைபேசிகள் என்பனவற்றை தாண்டி வானியல், பாதுகாப்பு, சுகாதாரம், நுகர்பொருள் போன்ற பல துறைகளில் நம் வாழ்வை எளிமைப்படுத்தவும் துல்லியப்படுத்தவும் இந்த மின்னணுச் சில்லுகளின் ஆற்றல்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்காவின் முன்னணி நுண்மின்னணுச் சில்லு நிறுவனமான NVIDIA என்ற ஒரு நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே நமது தற்போதைய இந்திய ஆண்டு பொருளாதார மதிப்பான நான்கு லட்சம் கோடியை விட அதிகமாகும் என்பதிலிருந்து இதன் மதிப்பை அறியலாம். இனி அடுத்து வரும் சில  தசாப்தங்களின் பொருளாதாரம் இந்த சில்லுகளின் திறன், உற்பத்தி அடிப்படையிலேயே அமையும் என்பது நிச்சயம். இதில் கோலோச்சும் தேசங்களே உலகை  ஆட்டுவிக்கும் என்பது நிச்சயம்.

இன்று உலகின் நாட்டாமையாக தன்னை கருதிக்கொண்டிருக்கும் அமெரிக்க தேசம் இந்தியா, சீனாவை போன்ற நாடுகளை கண்டு அஞ்சுவது இந்த நுண்மின்னணுச் சில்லுகளின் வளர்ச்சியில் தங்களை இவ்விரு நாடுகளும் வீழ்த்திவிடும் என்பதனாலேயே ஆகும். சீனாவைவிட இந்தியாவில் உழைக்கும் வயதுடைய மனித வளமும், அறிவு வளமும் அளப்பரியதாக உள்ளது நமக்கு சாதகமான அமைப்பு. ஆனால் தற்போதைய நிலையில் நாம் சீனர்களைவிட இத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்பதே நிதர்சனம். தற்போது சுமார் நானூற்றைம்பது கோடி ரூபாயாக இருக்கும் இந்திய மின்னணுச் சில்லுச் சந்தை 2030 ஆம் ஆண்டு வாக்கில் 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இதனால் இத்துறையை நோக்கி பலரும் படையெடுக்கிறார்கள். நமது தேசமும் கல்வி, ஆய்வு மேம்பாடு போன்றவற்றில் இத்துறையில் பல கட்டமைப்புகளை விரைந்து எடுத்து வருகிறது.

ஜாதக அமைப்பு சாதகமாக இல்லாத பலர் தாங்கள் கற்ற கல்விக்கும் சம்பாத்தியத்திற்கும் தொடர்பற்ற துறைகளில் இருப்பதால், எத்தகைய ஜாதக அமைப்புடையோருக்கு இந்த நுண்மின்னணுச் சில்லுகள் துறை கைகொடுக்கும் என்பதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

காரக கிரகங்கள்:

Chip என்று சுருக்கமாக அழைக்கப்படும் Semiconductor இன் காரக கிரகங்கள் ராகுவும்-கேதுவுமாகும். குறிப்பாக சிறிய வடிவத்தில் அளப்பரிய திறன்களை உடையதால் கேது இதன் முதன்மை காரக கிரகமாகவும் எண்ணற்ற செயல்களை  ஒருங்கிணைத்து செய்யக்கூடியது என்பதால் ராகு இதன் இரண்டாவது காரக  கிரகமாகவும் அமைகிறார்கள். புதிதாக ஒன்றை உருவாக்குதல் என்பது சூரியனின் ஆதிக்கத்தில் வரக்கூடியதாகும். வடிமைத்தல் (Designing) என்பது புதன், சுக்கிரனின் ஆதிக்கத்தில் வரும். மனோ காரகர் சந்திரனின் தொடர்பில் ராகு-கேதுக்களும் வடிவமைப்பு கிரகங்களும் தொடர்பாவது சிறப்பானது. எட்டாமிடம் இயல்புக்கு மாறான புதியனவற்றை குறிப்பிடக்கூடிய பாவகமாகும். லக்னமோ, லக்னாதிபதியோ ராகு-கேதுக்களின் தொடர்பில் அமைவது நன்று. படைப்பாற்றலை குறிப்பிடக் கூடிய 5 ஆமிடமும் புதுமைகளுக்குரிய எட்டாமிடமும் தொடர்பாவது சில்லுகள் துறையில் ஒருவர் கோலோச்ச சிறப்பை சேர்க்கும்.    

பிரிவுகள்:  

Chip துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. VLSI என்று சுருக்கமாக அழைக்கப்படும் Very LargeScale Integration பிரிவில் பல லட்சம் குறைகடத்திகளை (Transistors) ஒரு சில்லுக்குள் (Chip) அதன் பயன்பாட்டிற்கேற்றபடி வடிவமைத்து, ஒருங்கிணைத்து அடைக்கிறார்கள். சில்லுகள் பிரிவிலேயே இதுதான் முதன்மையானது. இதன் பிறகு இச்சில்லுகளின் பயன்பாட்டை உறுதி செய்யும் Embedded போன்ற சில துறைகள் உண்டு.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் ஆராய்ச்சியை குறிப்பிடும் கால புருஷனுக்கு எட்டாமிடமான விருட்சிகத்தில், லக்னத்திற்கு எட்டாமதிபதி புதனின் கேட்டையில் அமைந்துள்ளது. வக்கிர கிரகங்கள் ராகு-கேதுக்களுடன் இணைந்து செயல்படும் எனும் விதிப்படி, ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் படைப்பாற்றலை குறிப்பிடும் 5 ஆமிடம் மீனத்தில் வக்கிரம் பெற்று ராகு-கேதுக்களின் புதுமை குணத்தை பெற்றுள்ளார். 5 ல் அமைந்த வக்கிர செவ்வாய்  எட்டாமிடத்தை நான்காம் பார்வையாகவும், எட்டாம் அதிபதி புதனை எட்டாம் பார்வையாகவும் பார்க்கிறார். இது புதுமை படைப்பாற்றலுக்கு மிகச் சிறப்பு. செவ்வாய் சனியின் உத்திரட்டாதியில் அமைந்ததால் ஜாதகரது ஜீவனம் புதுமையான வகையில் படைப்பாற்றலை வெளிப்படுத்தி அமையக்கூடியது என்பதை குறிப்பிடும். 5 ஆமதிபதி குரு ரிஷபத்தில்  சந்திரனின் ரோஹிணியில் நின்று லக்னத்தையும் சந்திரனையும் பார்ப்பது சிறப்பு.

முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் சூரியனின் உத்திராடத்திலமைந்த சந்திரனை நோக்கி காரக கிரகம் ராகு வருகிறார். இதனால் இவர் மனம் சில்லுகள்  உருவாக்கத்திற்கு தேவையான சிந்தனையை பெறும். மற்றொரு காரக கிரகமான கேது புதியன உருவாக்கத்தை குறிப்பிடும் சூரியனின் சிம்ம ராசியில், வடிவமைப்பின் காரக கிரகங்களுள் ஒன்றான சுக்கிரனின் பூரத்தில் அமைந்துள்ளார். பாகிய ஸ்தானமான கடகத்தில் நின்று சந்திரனின் நேர் பார்வையை பெறும் சுக்கிரன் தன் வீடு துலாத்திலமைந்த புதனுக்கு தசம கேந்திரத்தில் புதனின் ஆயில்யத்தில் அமைந்துள்ளதால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் வடிவமைத்தலில் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படும். சிம்மத்தில் சுக்கிரன் சாரத்தில் நின்று சுக்கிரனை நோக்கிச் செல்லும் கேது Chip  வடிவமைத்தலில் நல்ல நுட்பத்தை ஜாதகருக்கு வழங்குவார் எனலாம்.  

மேற்கண்ட அமைப்புகள் ஜாதகர் Chip வடிவமைத்தல் எனும் VLSI துறையில் செயல்பட மிகச் சிறந்த அமைப்பாகும். ஆனால் ஜாதக அமைப்புகள் எல்லாம் ஒரு ஜாதகருக்கு செயல்படுவதில்லை. அதற்கு ஜாதகத்தில் தொடர்புடைய தசா-புக்திகள் வர வேண்டும். இந்த ஜாதகருக்கு ராகு தசை 2009 முதல் நடப்பில் உள்ளது. ஜாதகர் புகழ் பெற்றதொரு Chip நிறுவனத்தில் முதன்மை வடிவமைப்பாளராக VLSI துறையில் ராகு தசை துவக்கம் முதல் பணிபுரிந்து வருகிறார். ஏழரை சனி ஜாதகருக்கு எண்ணற்ற சிரமங்களை கொடுத்தாலும் ராகுவின் காரக தொழிலை செய்வதால் தொழிலில் மட்டும் ஜாதகருக்கு பெரிய சிரமங்கள் ஏதுமின்றி பணிபுரிந்து வருகிறார். தசா நாதர் ராகு ஸ்திர ராசியான கும்பத்தில் இருந்து தசை நடத்துவதால் ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நல்ல நிலையில் பணிபுரிந்து வருகிறார்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil