தாத்தா-பாட்டி செல்லங்கள்!

ஒருவருக்கு பூர்வீக கர்மாவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை ராகுவும் கேதுவுமாகும். இவ்விரு கிரகங்களும் மனித வாழ்வை திசை மாற்றிவிடும் வல்லமை படைத்தவை. அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவை இவை. அதே சமயம் நல்ல ஒரு ஜாதகரது  கொடுப்பினைகளை தவறாது அளிப்பவை. ராகு-கேதுக்கள் சூரிய சந்திரர்களுக்கு கிரகண தோஷத்தை வழங்குபவை. எனவே சூரியனுக்கு ராகுவும் சந்திரனுக்கு கேதுவும் கடும் பகை கிரகங்களாகும். சூரிய சந்திரர்களோடு எந்த வகை தொடர்பில் இவை இருந்தாலும் அவற்றின் பொறுப்புகளை தட்டிப்பறித்து தங்கள் பாணியில் ஜாதகருக்கு வழங்குபவை. சூரிய சந்திரர்கள் குறிக்கும் ஒருவரது பெற்றோர்களை இவை பாதித்தாலும் தங்களது அம்சங்களான பேரக்குழந்தைகளை அரவணைப்பவை. ராகு கேதுக்கள் குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டியை குறிக்கும் கிரங்கள் என்பதுதான் இதற்குக் காரணம். ராகு-கேதுக்கள் இதர கிரகங்களின் தொடர்பற்று தனித்து அமைத்த ஜாதகத்தில் இவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஜாதகருக்கு மாற்றுச் சிந்தனையை, தொடர்பை வழங்குபவை. ஆனால் கிரக சேர்க்கையில் அமைந்த ராகு-கேதுக்கள், உடன் இணைந்த கிரக காரக உறவை பாதித்து, அந்த காரக உறவு மூலம் ஜாதகரை தொந்தரவு செய்பவை. அப்படியான ஒரு ஜாதக அமைப்பில் ஜாதகர் இவற்றின் சேர்க்கை பெற்ற கிரக காரக உறவால் பாதிக்கப்படுவார். ஆனால் அந்தக் காரக உறவு மாற்றுச் சிந்தனை கொண்டிருப்பின் ஜாதகருக்கு தீமை செய்யா நிலையையும் ஏற்படுத்தும். இப்பதிவில் ராகு-கேதுக்களின் இந்த சூட்சும நிலையப் பற்றியே ஆராயவுள்ளோம்.   

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்

மக நட்சத்திரத்தில் 2006 பிறந்த இச்சிறுமி, பிறக்கும்போதே கேது திசையில் பிறந்துள்ளார். தாத்தா-பாட்டியிடம் மிகுந்த அன்பைக்கொண்டிருந்த இச்சிறுமியை தாத்தா-பாட்டிதான் வளர்த்துள்ளனர். கேது நேர்மை உண்மை, நற்குணம் ஆகியவற்றிக்கான காரக கிரகமாகும். லக்னத்தை ஆக்கிரமித்துள்ள  கேது ஜாதகிக்கு தனது நற்குணங்களை போதிக்கிறார். தனித்த நிலையில் குரு வீட்டில் இருந்து லக்னத்தை பார்க்கும் ராகுவும் குரு போன்றே சுபத்துவத்தை , பாசத்தை ஜாதகிக்கு வழங்குகிறார். இந்த ஜாதகத்தில் தாய்-தந்தையை குறிக்கும் சூரிய சந்திரர்கள் 6, 12 ல் மறைந்து சூரியனை நோக்கி ராகுவும் சந்திரனை நோக்கி கேதுவும் வருவதால், சூரிய-சந்திர காரக உறவுகளை கட்டுப்படுத்தி அவர்கள் வளர்க்க வேண்டிய இச்சிறுமியை தாங்களே வளர்க்கின்றனர். இந்தச் சிறுமிக்கு தாத்தா- பாட்டியிடம் கொண்டிருந்த ஈர்ப்பைவிட பெற்றோரிடம் உள்ள ஈர்ப்பு மிகக்குறைவு. 6 மாதங்களுக்கு முன் இச்சிறுமியின் தாத்தா மரணமடைந்தார். இதனால் தாத்தாவின் பாசம் கிடைக்கா சிறுமி பெரிதும் பாதிக்கப்பட்டார்.  அது முதல் ஜாதகிக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தாத்தா மரணமடைந்தது  முதல் பேய் பயமும், பாம்பு பயமும் உள்ளது. இரவில் விளக்கை போட்டுக்கொண்டுதான் உறங்குகிறார். பெற்றோர் உடன் இருந்தும்  அவர்களின் பாசத்தை ஜாதகியால் உணர முடியவில்லை. தாத்தா வயதில் உள்ள நபர்களை கண்டால் ஏக்கத்துடன் கண்ணீர் வடிக்கிறார். இந்த ஜாதகி ஜப்பானிய மொழியும், ஜெர்மன் மொழியும் விருப்பத்துடன் பயில்கிறார். கேது ஜப்பானிய மொழிக்கு காரக கிரகமாகும். ராகு-கேதுக்கள் இரண்டுமே சர்ப்ப கிரகங்களாகும். பேய், பிசாசு போன்ற கண்ணுக்குத்தெரியா மாய சக்திகளின் காரக கிரகங்களாகும். ராகுவின் காரக உறவை இழந்த ஏக்கத்தில் ஜாதகிக்கு பாம்புக் கனவு வருகிறது.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

1971 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம் இது. சூரியனோடு சனி தொடர்புகொண்ட ஆண்களுக்கு தந்தை விரோதியாகத் தெரிவார். இந்த ஜாதகத்தில் சனி+சூரியன் சேர்க்கை உள்ளது. சந்திரன் லக்னத்திற்கு  12 ல் மறைந்து ராகு-கேதுக்களுடன் கிரகண தோஷம் பெறுகிறது. லக்னத்தைவிட ராசியோடு அதிக கிரகங்கள் தொடர்புகொண்ட ஜாதகம் இது. இதனால் லக்னத்தைவிட ராசி முக்கிய வலுப்பெறுகிறது. இந்த ஜாதகர் தந்தையின் பணியின் பொருட்டு, பிறந்தது முதல் பெற்றோரை பிரிந்து தாத்தா பாட்டி வீட்டில்தான் வளர்ந்தார். சந்திரன் சுய சாரமான திருவோண நட்சத்திரத்தில் உள்ளார். எனவே பிறக்கும்போதே சந்திர தசை. பிறகு வந்த செவ்வாய் தசை. ராகு தசை ஆகியவை ஜாதகரை பெற்றோரிடமிருந்து நிரந்தரமாக பிரித்து, தாத்தா-பாட்டியிடமே வளர வைத்துள்ளது. தற்போது சமுதாயத்தில் உயர்ந்த, பொறுப்பான நிலையில் ஜாதகர் உள்ளார். ஆனால் தற்போதும் பெற்றோரை அன்னியமாகத்தான் இவரால் பார்க்கமுடிகிறது. சிறிதும் பெற்றோர் பாசம் அறியா மனிதராக உள்ளார். காரணம் ராசியோடு தொடர்புகொண்ட சர்ப்ப கிரகங்கள், ஒளி கிரகங்களான சூரிய சந்திரர்களின் செயலை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டதுதான்.

மூன்றாவதாக ஒரு சிறுவனின் ஜாதகம் கீழே.

2012 ல் பிறந்த சிறுவன். குடும்ப பாவமான இரண்டாமிடத்தில் கேது உள்ளது. இச்சிறுவனது பாட்டி சிறுவனது குடும்பத்தோடு ஒன்றிணைந்து உள்ளார். கேதுவுக்கு 1௦ ஆமிடத்தை சூரியன் பார்ப்பதாலும், கேதுவோடு குரு இணைந்துள்ளதாலும் பாட்டி அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்ற தனது பணிப்பயன் அத்தனையும் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு செலவு செய்கிறார். இதனால் மகளின் (சிறுவனின் தாய்) குடும்பத்தோடு பாட்டி இணைந்துள்ளார். ஆனால் பாட்டனை குறிக்கும் ராகு லக்னத்திற்கு 8 ல் மறைந்துவிட்டதால் தாத்தா இச்சிறுவனது குடும்பத்தோடு ஒருங்கிணையவில்லை. தாத்தா தனித்து வாழ்கிறார். லக்னத்தையூம் அதன் எதிர்பாவத்தையும் விட்டு, ராகு மட்டும் தனித்து நிற்கிறது. இதனால் தாத்தா மட்டும் தனித்து வாழ்கிறார். ஆனால் ராகு-கேது அச்சை விட்டு லக்னம் மட்டும் தனித்து இருப்பதால் இச்சிறுவனுக்கும் அவனது எதிர்காலத்தில் இதே நிலைதான் ஏற்படும். அதாவது ஜாதகனின் மனைவி தனது குழந்தைகளின் குடும்பத்தோடு இணைத்து வாழ்வார். ஜாதகனுக்கு தாத்தாவின் தனிமை நிலைதான் ஏற்படும். தாத்தாவின் கர்மாவை அனுபவிக்கப் பிறந்த ஜாதகன் இச்சிறுவன். ஒரு உறவுக்கு ஒரு ஜாதகர் பாதிப்பை ஏற்படுத்தினால், அவ்வுறவு பாதிப்பை ஏற்படுத்திய ஜாதகரின் சந்ததிகளிடம் அதன் பதிலடியை தந்தே தீரும் என்பது இதன் உட்கருத்தாகும்.  

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »
Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English