ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் 1930 – 2015
சுவாமிகள் 23.09.2015 அன்று இரவு 10.17  மணிக்கு ரிஷிகேஷில் ஜீவ முக்திடடைந்தார்.
பாரத புண்ணிய பூமியை, நமது இந்து தர்மத்தை உய்விக்க வந்த மகான்.ஆனால் பிற்பாடு மதங்களைக்கடந்த மகானானார்.   
சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆத்ம நண்பரும் பிரபல ஆடிட்டருமான திரு.ரமணி அவர்களை சந்திக்க கோவை சென்றிருந்தபோது இந்த மகானை தரிசிக்க ஆனைகட்டி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். சுவாமிகள் அப்போது அமெரிக்காவில் தனது ஆசிரமத்தில்  இருந்ததால் தரிசிக்க இயலவில்லை. ஜோதிடனான நான் புதனின் அம்சம். மகான்கள் குருவின் அம்சம். புதனுக்கும் குருவிற்கும் ஜோதிட விதிகளின்படி கடும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் ஒன்றையொன்று மிகவும் வசீகரிப்பவை என ஜோதிடத்தில் பல்வேறு ஆய்வுகள் செய்த காலஞ்சென்ற ஜோதிட அறிஞர் நம்புங்கள் நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  காலச் சூழலில் பிறகு பல முறை முயன்றாலும் எனது கர்மா இவரைப்போன்ற மகான்களை தரிசிக்க எனக்கு பாக்கியமில்லை என்பது போன்று உணர்த்தியது. இவர்போன்ற ஞானிகளை உயிரோடிரிந்தபோது தரிசிக்கும் யோக்கியதையை எனக்கு அருளும் இறைவா என என்னைப்படைத்தவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.

 மிக எளிய கிராமமான மஞ்சுக்குடியில் பிறந்த மகான்.. ஆளால் மகத்தான ஆன்மீகவாதி. இந்த உலகை உய்விக்க வந்த ராகவேந்திரரின் மறு உருவமாகவே அவரை நான் கண்டேன். இவர் போன்ற பரிசுத்த ஞானிகளை இனி வரும் காலத்தில் தரிசிக்க இயலாது. காரணம் காலகட்ட தோஷம். ஜோதிட வரலாற்றை நான் எனது வலைப்பூ துவங்கிய போது இவரை எனது மானசீக வழிகாட்டியாக எண்ணியே எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.இனியும் நமக்கு வழிகாட்டியாய் நம் மனதில் நிறைந்து நமது வாழ்வை செம்மைப்படுத்துவார். இதற்கு மேலும் இவரைப்பற்றி எழுத எனக்குத் தகுதியில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.


கனத்த இதயத்துடன்,

அன்பன்,
பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

தேடல்கள்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை

மேலும் படிக்க »
கல்வி

Risk Assessment

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக

மேலும் படிக்க »
Tarot

That’s All Your Honour!

ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்

மேலும் படிக்க »
கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil