பாம்புகளும் கழுகுகளும்!

பாம்புகளும் கழுகளும் ஒன்றுக்கொன்று கடும் பகையானவை. ஆனால் அவைகளும் இயற்கையின் நியதிப்படி சில விஷயங்களை ஒரே மாதிரி தங்களது வாழ்வில் கடைபிடிக்கின்றன. பாம்புகள் பழுதாகிவிட்ட தங்களை தோலை அவ்வப்போது உரித்துக்கொண்டுவிடுகின்றன. கழுகுகள் வாழ்வின் பிற்பகுதியில் தங்களது இறகுகளையும், கால் விரல் நகங்களையும், அலகையும் உதிர்த்துவிட்டு புதிதாக அவற்றை வளர்த்தெடுத்து மீதி வாழ்நாட்களை வலிமையோடு எதிர்கொள்கின்றன. கழுகளுக்கு அது ஒரு கடினமான காலமாக இருக்கும். புதிதாக இறகுகள் வளரும்வரை உணவு தேடிச் செல்ல இயலா நிலை ஏற்படும். ஆனாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தங்களை புதுப்பித்துக்கொள்கின்றன. அப்படி தங்களை உயிர்பித்துக்கொள்ளாவிட்டால் மீதி வாழ்நாட்களை எதிர்கொள்ள இயலாது என்பது அவற்றிற்குத் தெரியும். மனிதனைவிட அறிவில் சிறியவைகளான இத்தகைய உயிரினங்களே  காலத்தின் அவசியம் கருதி தங்களை மாற்றிக்கொள்ளும்போது, அவைகளைவிட அறிவில் மேம்பட்ட மனிதன் மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்வது இன்றியமையாதது. அப்படி மாற்றங்களை எதிர்கொள்ளாத மனிதன் மட்டுமல்ல, எந்த உயிரினமும் தம் வாழ்வில் தோல்வியடையும் என்பது உறுதி. “Comfort Zone” எனும் சௌகரிய வட்டத்தை விட்டு விலகத்  துணிச்சலற்றவர்கள் தங்கள் சுய திறமை என்ன என்பதையே அறியாதவர்களாகிறார்கள்.  இத்தகையவர்களே கடுமையான காலமாற்றத்தில் எளிதில் காணாமல் போகிறார்கள். குறிப்பாக சம்பாத்தியச் சூழலில் மாறிவரும் இன்றைய உலகின் தேவைகேற்ப தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள் செய்தொழிலில் கடும் பாதிப்பை சந்திக்கிறார்கள். காலம் சில சமயங்களில் இறக்கமற்றதாகத் தோன்றும். அதற்குக் காரணம் தவிர்க்க இயலாத மாற்றங்கள்தான். காலம் கொணரும் மாற்றங்கள் பல சமயங்களில் தங்களது வாழ்வின் அற்புதங்களை கண்டுகொண்டு அவற்றை அனுபவிக்கவே என்பதை உணர்ந்தால் கவலைப்படத் தேவையில்லை.

10 வருடங்களாக பணியிடத்தில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், திடீரென வேலை போய்  விட்டதால் திகைத்துப்போனார். தொழில் திறமையும் வளமையும் கொடுத்த தெம்பு அவரை எதிர்காலத் சூழலை கணிப்பதை அவசியமற்றதாகச் செய்திருந்தது. இப்போது என்ன செய்வது? என்ற கேள்வியுடன் என்னை அனுகியவருக்காகப் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

கடக உதயம். உதயத்தில் அமைந்த ஜாமச் சனி (வெளிவட்ட சனி) 7 ல் அமைந்த 10 ஆமதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறார். அதே சமயம் மேஷத்தில் இருந்து உள்வட்ட செவ்வாய் நான்காம் பார்வையாக தனது நீச வீட்டில் அமைந்த உதய சனியை பார்க்க, உதய சனி தனது 10 ஆம் பார்வையாக மேஷ செவ்வாயை பார்க்கிறார். உதயத்திற்கு 8 ல் அமைந்த உள்வட்ட சனியும் மேஷ சனியை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். இவை கடுமையான தொழில் சூழலை  தெரிவிக்கிறது. மேஷத்தில் அமைந்த செவ்வாய் திக்பலம் பெற்றிருக்க, ஜாமச் செவ்வாயும் மகரத்தில் உச்சம் பெற்றிருப்பதை கவனிக்க. இவை கேள்வியாளர் உயர்ந்த பொறுப்பில் இருந்துள்ளதை குறிப்பிடுகிறது. உதயத்திற்கு 5 ல், சனி சாரத்தில் அமைந்த ஆரூடம் பணியிழப்பை குறிப்பிடுகிறது. 6 ல் தனுசில் அமைந்த கவிப்புடன் ஜாம குரு இணைவு கேள்வியாளரின் வேலை பாதிக்கப்பட்டுள்ளதை தெளிவாக குறிப்பிடுகிறது. உதயம் மிதுனத்தை கடந்து வந்துள்ளதை கவனிக்க. ஜாமச் சந்திரன் உதயத்திற்கு  12 ல் 6 ஆமதிபதி குரு சாரத்தில் மறைந்து கவிப்பின் பார்வையை பெறுவது ஜாதகர் பணியிழப்பை சந்தித்துவிட்டவர் என்பதை தெளிவாக்குகிறது.

இனி பணியிழப்பின் காரணத்தை அறியலாம் வாருங்கள். 10 ல் அமைந்த செவ்வாய் 9 ஆமிட ராகுவை சந்தித்துவிட்டு வந்துள்ளது. இதனால் கேள்வியாளர் தனது பணியில் கடுமையான கசப்பை கடந்து வந்துள்ளது தெரிகிறது. முதலாளியை குறிப்பிடும் 9 ஆமிடத்தில் ராகு நின்று நிர்வாக காரகர் சூரியன் வெளிவட்டத்தில் நிற்க, உள்வட்டத்தில் சூரியன் 12 ல் மறைந்தது இவரது முதலாளி நிர்வாகத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள இயலாமல் கேள்வியாளரை பணி நீக்கம் செய்திருப்பார் என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் ராகுவை கடந்து செவ்வாய் திக்பலத்தில் தற்போது நிற்பது கேள்வியாளர் சூழ்நிலையை சமாளிக்கும் மன உறுதியுடன் இருப்பதை குறிப்பிடுகிறது. உள்வட்ட சந்திரனும் கேதுவை கடந்து துலாத்தில் திக்பலத்தில் நின்று மேஷ செவ்வாயின் பார்வையை பெறுவது கேள்வியாளர் தற்போது துணிவுடன் இருப்பதை உறுதி செய்கிறது. 10 ஆமிட செவ்வாயை மாற்றத்தின் காரகர் சந்திரனும், ஜீவன காரகர் சனியும் தொடர்புகொள்வது கேள்வியாளருக்கு மாற்றுப்பணி வாய்ப்பு வந்துள்ளதே இவரது மன உறுதிக்கு காரணம் என்பதை குறிப்பிடுகிறது.

பிரசன்னத்தில் 4 ஆமிடத்தில் அமைந்த ஜாம புதன் கன்னியில் கேதுவுடன் அமைந்த ஜாமச் சுக்கிரனுடன் பரிவர்த்தனை அடைந்துள்ளதை கவனியுங்கள். இது கேள்வியுடன் தொடர்புடையது அல்ல என்றாலும் கேள்வியாளர் பணிழப்பால் வீட்டுக்கடனை அடைக்க இயலாமல் போய் விடுமோ என்ற கவலையில் இருப்பதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை தனது சொந்த வீட்டில் இருந்து கேள்வியாளர் இடம் மாறி வசிப்பதையும் குறிப்பிடுகிறது. புதனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு வீடு காரகர் சுக்கிரன் துலாத்தில் திக்பலம் பெற்று மேஷத்தில் திக்பலம் பெற்ற செவ்வாயின் பார்வையை பெறுவதாலும், மகரத்தில் ஜாமச் செவ்வாய் வலுவாக நிற்பதாலும் இவரது வீட்டுக்கடனை அடைக்க எந்த பங்கமும் வராது என்பதை குறிப்பிடுகிறது. உண்மையில் கேள்வியாளருக்கு சுக்கிரன், செவ்வாயின் காரகங்கள் வலுவடைந்துள்ளதால் கேள்வியாளர் இவை தொடர்பான தொழில்களில் ஈடுபட்டால் வெற்றியடைவார். கேள்வி இது தொடர்பானது இல்லை என்றாலும் இந்த கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டால் கேள்வியார் பிரசன்னத்தின் துல்லியத்தை எண்ணி மகிழ்வார் என்பதுடன் அது ஜோதிடருக்கும் பெயர் பெற்றுத் தரும்.

மேற்கண்டபடி பிரசன்னத்தை ஆராய்ந்துவிட்டு “இழந்த வேலையை நினைந்து கவலைபடாதீர்கள். தற்போது உங்களுக்கு ஒரு வேலைக்கான வாய்ப்பு வந்திருக்கும். அதை தயக்கமின்றி  ஒப்புக்கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு செவ்வாய், சுக்கிரன் வலுவாக உள்ளதால் வீடு, மனை யோகம் சிறப்பாக உள்ளது. அது தொடர்பான தொழில்களில் ஈடுபட்டால் சிறப்பு” என்று பதில் கூறினேன். இதை ஆமோதித்த கேள்வியாளர் கூறியதாவது. “நான் முன்பு மின்சார இயந்திரங்களை கையாளும் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்தேன். தற்போது அதே போன்ற மற்றொரு நிறுவனம் எனக்கு பணி தர தயாராக உள்ளது. சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மற்றொரு வீட்டில் வசித்து வருகிறோம். சொந்த வீட்டிலிருந்து வரும் வாடகை மூலம் வீட்டுக் கடனை அடைத்து வருகிறோம். எனக்கு Real Estate தொழில் செய்யவும் மிகுந்த ஆர்வம் உள்ளது” என்றார்.

நெருப்பு ராசிகளில் செவ்வாய் மின்சாரத்தை குறிப்பிடும் என்பதை அறிக. பிரசன்னம் செவ்வாய், சுக்கிரன் சார்ந்த விஷயங்களில் கேள்வியாளருக்கு உயர்வுகள் காத்துள்ளதை தெரிவிக்கிறது. அவர் கடந்த வாழ்க்கைச் சூழலிலேயே முடங்கிவிட்டால் வாழ்க்கை அவருக்கு அளிக்கக் காத்திருக்கும் வாய்ப்புகளை அடையாமலேயே போய்விடும் வாய்ப்பு உள்ளதாலேயே கிரகங்கள் அவரது வாழ்வை மாற்றிவிடுகின்றன. நீங்கள் எப்படி ஓரிடத்தில் அடைந்துகிடக்கும் கோழிகளா? அல்லது நல்வாழ்விற்காக கடின சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் கழுகுகளா?   

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

சுயதொழில் எனும் புதிய பயணம்: அடிமைத் தளையிலிருந்து ஆளுமைப் பாதைக்கு!

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது

Loading

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.” ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil