ஜாதகத்தில் 2, 8 பாவக தொடர்பு விளைவுகள்.

2ஆம் பாவகம் என்பது தனம், வாக்கு, குடும்பம், வலது கண், போன்ற பல்வேறு வகை காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜாதகத்தில் ஒரு பாவகம் மற்றொரு பாவகத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட  அந்த பாவகத்தின் செயல்பாடு அமையும். 2 ஆம் பாவகத்தின் எதிர் பாவகம் 8 ஆம் பாவகமாகும். இந்த வகையில் 2 ஆம் பாவகத்தின் நிவர்த்தி பாவகமாக 8 ஆம் பாவகம் வருகிறது. 2ஆம் பாவகம் ஒருவரது வளர்ச்சியை கூறினால் 8 ஆம் பாவகம் நமது தொடர்பாளரின் வளர்ச்சியை கூறும். 2 ஆமிடம் ஒருவரது குடும்ப பாரம்பரியத்தை கூறினால் 8 ஆம் பாவகம் அவரது வாழ்க்கை துணையின் குடும்ப பாரம்பரியத்தை கூறும். இப்படி மாறுபட்ட தன்மைகள் உள்ள இவ்விரு பாவகங்களும் ஜாதகத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகள் ஒருவரின் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுகின்றன  என்பதை ஆராய்வதே இன்றைய பதிவு. 

கீழே ஒரு ஆணின் ஜாதகம். 

இரண்டாமிடம் தனம். 

ரிஷப லக்னத்திற்கு இரண்டாமதிபதி புதன் ராசிக்கு 6 ல்,  லக்னத்திற்கு 7 ல்  திக்பல சனியோடு இணைவதால் இவரது ஜீவனம், 2 ஆமிட சந்திரன் குறிக்கும் கடல்கடந்த தொடர்புடைய, வெளிநாடு சார்ந்த, தகவல் தொடர்புடையதாக இருக்கும். நீர்க்கிரகமான சந்திரன் மற்றொரு நீர் கிரகமான 9 ல் அமைந்த குருவின்  புனர்பூசத்தில் நிற்கிறார். இது மேற்சொன்ன கருத்தை உறுதி செய்கிறது. ஜாதகர் ஒரு கப்பல் நிறுவனத்தில் தகவல் தொடர்புகளை நிர்வகிக்கிறார். 8 ஆமதிபதி குரு பாக்ய ஸ்தானத்தில் நீசம் பெற்று தனது உச்ச வீட்டை பார்ப்பதால் பொருளாதாரத்தை தடை செய்ய மாட்டார். ஆனால் ஜாதகரின் பாக்கியத்தில் குறை வைப்பார். 1௦ ஆமதிபதி சனி, 1௦ க்கு 1௦ ல் திக்பலத்தில் நிற்பதால் இவரது வேலை சிறப்பாக உள்ளது. 

இரண்டாமிடம் வாக்கு. 

இரண்டாமதிபதி புதன் 2 க்கு 6 ல் மறைவு. எனவே இரண்டாவது பாவகத்தை சந்திரனும், இரண்டாமிடத்தை பார்வை செய்யும் சூரியனும் சுக்கிரனும்தான் இயக்க வேண்டும்.  மேற்கண்ட ஜாதகத்தில் 8 ஆமிட கிரகங்கள் அதன் அதிபதி குருவை சார்ந்தே இயங்கும். ஜாதகத்தில் குரு நீசம். 2 ஆமிட சந்திரன் நவாம்சத்தில் உச்சமாகி 2 ஆவது   பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். வாக்கு காரகர் புதனின் வீட்டில், பேச்சு காரகர் சந்திரன் நீச குரு சாரத்தில் நிற்பதால், இவரது பேச்சில் ஒரு குறை இருக்க வேண்டும். 2 ஆமதிபதி புதன் சந்திரனின் நீச வீட்டில் நிற்பது இதை தெளிவாக்குகிறது. இதன்படி 36 வயதான ஜாதகரது பேச்சு பாதிக்கப்படவில்லை. ஆனால் வயதுக்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் குழந்தைத்தனமாகவே பேசுகிறார். குரு குழந்தையை குறிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. குருவின் நீசம் பேச்சில் வெளிப்படுகிறது. 

இரண்டாமிடம் குடும்பம்.

களத்திர பாவகமான 7 ஆமிடம், களத்திர பாவாதிபதி, களத்திர காரகர் மற்றும் குடும்ப காரகர் குரு ஆகியோர் ஒரு ஜாதகத்தில் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு திருமணம் நடப்பது கடினம். குரு ஜாதகத்தில் நீசம், 7 ஆமதிபதி செவ்வாயும், களத்திர காரகர் சுக்கிரனும் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளனர். 7 ஆமிடத்திற்கு பாவ கர்த்தாரி யோகமும் உள்ளது. இதனால் ஜாதகருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.  2 ல் அமையும் தேய்பிறை சந்திரன், மூன்றாம் அதிபதி என்பதால் தனது காரக அடிப்படையில் பாதிக்கும்.  தாயை குறிக்கும்  4 ஆமதிபதி சூரியன், 8 ஆமிடத்தில் நின்று தேய்பிறை சந்திரனை பார்ப்பதால் தாயாரால் ஜாதகருக்கு தீமையும் கிடைக்கும்.  இதன்படி தாயின் பாசத்திற்கு அடிமையான ஜாதகர் தனக்கு தாய் போன்ற பெண் அமைந்தாலன்றி திருமணமே வேண்டாம் என்று கூறுகிறார். அதிக பாகை பெற்ற தேய்பிறை சந்திரன் குடும்ப பாவகத்தில் நின்று, சந்திரனுக்கு எதிர் பாவகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் குறைந்த பாகை பெற்று 4 ஆமதிபதி சூரியனால் அஸ்தங்கப்படுவது ஜாதகர் இப்படி எண்ணுவதற்கு காரணமாகியுள்ளது. 

இரண்டாமிடம் உணவு.

தாயை குறிக்கும் உணவு காரகர் சந்திரன்,  உணவு பாவகமான 2 ல் அமைந்து நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் தாயார் 36 வயதான   ஜாதகருக்கு இன்னும் உணவு ஊட்டி விடுகிறார். உணவு பாவகத்தில் நிற்கும் உணவு காரகர் சந்திரன் நீசன் குரு சாரம் பெறுவதால் இவர் உண்ணும் உணவு அசைவமாக இருக்குமா? எனில் இருக்காது. காரணம் குரு நீசம் பெற்றாலும் சுபத்தன்மையை இழக்க மாட்டார். பாவிகளோடு இணைந்தாலன்றி பாவிகளின் பார்வையை மீறி செயல்படும் தன்மை குருவிற்கு உண்டு. இங்கு குரு சனி, செவ்வாயின் பார்வை பெறுவது ஜாதகரின் குடும்ப வாழ்வை பாதிக்குமே அன்றி உணவை அல்ல. ஜாதகர் சைவ உணவை மட்டுமே உண்பவர்.   

பெற்றோரால் திருமணம் செய்து வைக்க இயலாத ஜாதக அமைப்பு. 

களத்திர பாவகத்தில் சனியும், புதனும் தங்களது சுய சாரத்திலே அமைந்துள்ளனர். சனி, புதன் சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இணைந்திருந்தால் அவை தொடர்புடைய பாவக வகையில் ஜாதகர் ஏமாற்றப்படுவார். தற்போதைய புதன் தசை ஜாதகருக்கு 45 வயது வரை  நடக்கிறது. தற்போது திருமண காலமே. ஆனால் திருமண விஷயத்தில் கிரகங்கள் ஜாதகரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகின்றன. 2 ஆமிடத்தை கட்டுப்படுத்தும் சந்திரன் நீசம் சாரம் பெறுவதால் குறைபாடுடைய வாழ்க்கைத்துணையை ஏற்றுக்கொள்வது ஜாதகருக்கு திருமண வாய்ப்பை வழங்கும். கௌரவ காரகர் சூரியன் களத்திர காரகர் சுக்கிரனை அஸ்தங்கப்படுதியுள்ளதால் குறைபாடுடைய ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். காரணம் சூரியன் 8 ல் நிற்பதும், சந்திரன் 8 ஆமதிபதி சாரமும் பெறுவதுதான். தசா நாதன் புதன், தாயான சந்திரனுக்கு 6 ல், தந்தையான சூரியனுக்கு 12 ல் நின்று தசை நடத்துகிறார்.இதனால் ஜாதகருக்கு திருமண வாய்ப்பு பெற்றோர்களாலேயே மறுக்கப்படுகிறது. 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 830012401.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil