நில், கவனி, காதலி!

இன்றைய திருமண எதிர்பார்ப்பானது கல்வி, வசதி, அந்தஸ்து என்பனவற்றை முன்னிட்டே அமைகிறது. உண்மையான காதல் தங்களுக்கிடையேயான புரிதலைவிட இதர விஷயங்களை கண்டுகொள்ளாது. இரு மனம் இணைவில் மூன்றாவது நபர் தலையிடும்போதுதான் இதர விஷயங்கள் பேசப்பட்டு அங்கு காதல் காணாமல் போகும் நிலை உருவாகிறது. இன்னும் ஒரு தசாப்தத்தில் இந்திய காதலர்கள் தங்களுக்கிடையே மூன்றாவது நபர் தலையீட்டை அது பெற்றோர்களானாலும்  ஏற்கமாட்டார்கள் என்பது திண்ணம். வளர்ந்து வரும் தற்சார்பு பொருளாதார நிலையே அதற்குக் காரணம். இந்நிலையில் தன் காலில் நிற்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் காதலில் தோற்றுவிட்டு புலம்புவதை காண முடிகிறது. அப்படியாக காதலின் வலியை அனுபவித்தவர்களின் குடும்ப வாழ்வு பற்றிய எண்ணம் எதிர்மறையானதாகவே இருக்கும். இப்படி காதலில் கசப்பை அனுபவித்த தங்கள் பிள்ளைகள் எங்கே தேவதாஸ் ஆகிவிடுவார்களோ என்ற கவலையில் எப்படியாயினும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வித்துவிட வேண்டும் என்ற நிலையில் பெற்றோர்களின் தலையீடு தவிர்க்க இயலாததாகிறது. பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொள்ளும் காதல் தோல்வியை சந்தித்த பிள்ளைகள் பழைய காதலின் ஆறாத காயங்களால், அமைந்த தங்கள் திருமண வாழ்வை பாழடித்துக்கொள்வதும் உண்டு. எனவே பெற்றோர்கள் இத்தகைய தங்கள் பிள்ளைகளின் மன நிலையை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியம். இத்தகையவர்களுக்கு ஜோதிடம் எப்படி உதவும் என்று ஆராய்வதே இன்றைய பதிவு.

கடக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் 12 ஆமிடமான மிதுனத்தில் மறைவு. ஜாதகரது வாழ்க்கை இவரது கட்டுப்பாட்டில் இருக்காது என்பதை இது குறிக்கும். எனினும் விரைவாக சுழலும் சந்திரன் தனது ஆட்சி வீடான லக்னத்தை நோக்கி நகருவதால் பிற்கால வாழ்க்கை இவரது கட்டுப்பாட்டில் வந்துவிடும். தற்போது திருமண காலத்தில் இருக்கிறார் எனும் நிலையில் இவரது திருமண அமைப்பை அறிய என்னிடம் கொடுக்கப்பட்ட ஜாதகம் இது.

ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் நவாம்சத்திலும் மிதுனத்திலேயே அமைந்து  வர்கோத்தமம் பெற்றுள்ளார். இது ஜாதகரின் எண்ணத்தில் உள்ள உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கும். களத்திர காரகர் சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் புதனுடன் பரிவர்த்தனையாகி துலாத்திற்கு வந்து அவர் ஆட்சி பெறுகிறார். அதனால் துலாத்தில் நீசமான குடும்ப ஸ்தானாதிபதி சூரியனை நீச பங்கப்படுத்துகிறார். ஆனால் பரிவர்த்தனைக்குப் பிறகு சுக்கிரன் சூரியனிடம் அஸ்தங்கமடைகிறார். புதன் கன்னிக்கு சென்று உச்சமடைந்தாலும் ராகுவோடு இணைகிறார். பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் புதனும் சுக்கிரனும் பாதிப்பான நிலையையே அடைகிறார்கள். ஜாதகர் சனி தசையை கடந்து, புதன் தசையில் கேது புக்தியில் இருக்கிறார். புக்திநாதர் கேது கோட்சாரத்தில் கன்னியில் ஜனன கால சுக்கிரன் மீதும், பரிவர்த்தனையாகி கன்னிக்கு வரும் புதன் மீதும் நிற்கிறார். இது காதலால் ஏற்பட்ட கசப்பில் இருந்து இன்னும் ஜாதகர் மீழாமல் இருப்பதையும் , திருமணத்திற்கு அவர் தயாராக இல்லை என்பதையும் காட்டுகிறது. இதை ஜாதகத்தை அளித்தவர்களிடம் தெரிவித்த பிறகு அவர்கள் கூறியதாவது. பையன் பள்ளிக்காலத்திலேயே ஒரு பெண்ணை காதலித்ததாகவும் பெண்ணின் பெற்றோர் இவர்களது காதலை ஏற்காததால் வேறொருவரை திருமணம் செய்துகொண்டு சென்று விட்டதால் மனமுடைந்த பையன் திருமணத்திற்கு நீங்கள் கூறுவதுபோல ஒப்புக்கொள்லாமல் இருக்கிறான் என்றனர். இத்தகைய இளைஞருக்கு வற்புறுத்தி திருமணம் செய்விப்பது அவரது வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கக்கூடும். எனவே பையன் திருமணத்திற்கு ஒப்புதல் கூறியபிறகு திருமண முயற்சிகளை துவக்குங்கள் என்றேன்.

இவ்விளைஞனின் கடந்த கால காதல் விஷயங்களை அவர் கடந்து வந்த தசா-புக்திகளை ஆராய்ந்தால் தெரியும். கடந்த தசாநாதர் சனி 9 ஆமிடமான மீனத்தில் வக்கிரமாகி தசை நடத்தியுள்ளார். 9 ஆமிடம் என்பது காதல் பாவகமான 5 ன் பாவத்பாவமாகும். மீனச் சனியை சிம்மத்தில் அமைந்த 5, 10 ஆமதிபதி செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்க்கிறார். தசாநாதருக்கு 5 ஆமதிபதி தொடர்பு ஏற்பட்டால் ஜாதகர் காதலிப்பார். ஆனால் செவ்வாயின் 8 ஆம் பார்வை அதில் பிரிவினையையும் ஏற்படுத்தும். சனி தசை 19 வருடங்கள் உடைய நீண்ட தசை என்பதால் ஜாதகர் பள்ளிக் காலத்திலிருந்தே குறிப்பிட்ட பெண்ணை காதலித்துள்ளார். ஜாதகருக்கு சனியை அடுத்து திருமண வயதில் வந்த தற்போதய காதல் காரகர் புதன் காதல் பாவகமான 5 க்கு 12 ல் இருந்து தசை நடத்துகிறார். இதனால் புதன் தசையில் ஜாதகர் காதல் தோல்வியை சந்திப்பார் என்பது தெளிவாகிறது. ஜாதகத்தில் பரிவர்த்தனையடையும் புதனும் சுக்கிரனும் ராகுவோடு தொடர்புகொள்வது கடும் தோஷமாகும். புதனும் சுக்கிரனும் தந்தையை குறிக்கும் சூரியனில் அஸ்தங்கமடைவதும் காதலி மனைவியாகும் சூழலில் காதலியின் தந்தை அவரை கட்டுப்படுத்துவார் என்பது புரிகிறது.

காதலிக்கும் முன் செய்யும் தேர்வு முக்கியமானது. காதலித்த பிறகு யாருக்காகவும் பின்  வாங்காத நிலை இருவருக்கும் இருக்க வேண்டும். காதல் திருமண நிலையை அடையும் காலத்தில் தசை நடத்தும் கிரகங்களும் காதல், களத்திர கிரகங்கள் பாதிக்கப்படாமல் நல்ல நிலையில் இருந்து தசை நடத்தினால் அவர்களது காதல் நிறைவேறும். எனவே காதலிக்கும் முன் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காண்பித்து தனது காதல் எப்படி என கேட்டுக்கொண்டு பிறகு காதலிக்கலாம். ஆனால் அதை

“யார் கேட்பார்கள்?”

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil